திருச்சிக்கும் வந்தாச்சு தாழ்தள சொகுசு பேருந்துகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தாழ்தள பேருந்து  பேருந்து போக்குவரத்து வசதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழக முதல்வர் தமிழ்நாடு முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தாழ்தள பேருந்து வசதியை துவக்கி வைத்தார் மேலும் இதன் ஒரு பகுதியாக நேற்று தம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மூன்று கட்டண தாழ்தள பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.  இந்த பேருந்தானது ஸ்ரீரங்கத்திலிருந்து விமான நிலையம் வரையிலும், கலைஞர் கருணாநிதி  பஞ்சப்பூர் பேருந்து  முனையத்தில் இருந்து துவாக்குடி வரையிலும் மற்றொரு பேருந்தானது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே கே நகர் வரை செயல்பட உள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்நிகழ்வில் மண்டல 3ன் குழு தலைவர் மு. மதிவாணன் திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ்குமார், திருச்சி மண்டல வணிகப்பிரிவு துணை மேலாளர் சுவாமிநாதன், துணை மேலாளர் தொழில்நுட்பம் புகழேந்தி ராஜ், திருச்சி கோட்ட மேலாளர் ராஜேந்திரன், டி.ஆர்.ஓ ராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி. பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி வட்டக் கழகச் செயலாளர் சங்கர். மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.