பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் !
சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (39) என்பவர் கோவில்பட்டி இருக்கன்குடி பஸ்சில் பயணம் செய்தபோது, கைப்பையில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை தவறவிட்டார்.
படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து இருக்கன்குடி நோக்கி சென்ற பஸ்ஸை மொபைல் மூலம் கண்டக்டரை தொடர்பு கொண்டு நத்தத்துப்பட்டி அருகே மடக்கி நிறுத்தினர். அதில் இருந்த கைப்பையை மீட்ட போலீசார் அதிலிருந்த ரூ.1 லட்சத்தையும் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கையை அனைவரும் பாராட்டினர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.