டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ! மதுரைக்கும் வந்தாச்சு !
வடமாநில கும்பலின் முத்திரை பதித்த மோசடிகளுள் ஒன்றாக இருந்துவரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, இப்போது மதுரைக்கும் வந்தாச்சு. மதுரையை சேர்ந்த இரண்டு பாதிக்கப்பட்ட முதியவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் பசூர் உர் ரகுமான், சகாபுதீன், ஜாவித் ஆகிய மூவரை கைது செய்திருக்கிறார்கள் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார்.
வழக்கம்போலவே, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கை துவங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும்; தீவிரவாத தடுப்புப்பிரிவிலிருந்து பேசுவதாகவும்; அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாகவும் மிரட்டியதில் வழக்கம்போலவே, சில இலட்சங்களை இழந்துவிட்டு பிறகு போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். இதுபோன்று, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், மறக்காமல் 1930 என்ற கட்டணமில்லா சைபர் கிரைம் உதவி எண்ணை அழைத்தால் உரிய வழிகாட்டுதலை தருவதற்கும் இழந்த பணத்தை உடனடியாக மீட்பதற்கும் வழிவகை செய்கிறார்கள். உஷார், மக்களே !
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.









Comments are closed, but trackbacks and pingbacks are open.