பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!
தனது வயது, தனது உடல் நலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றியவர்.
மாணவர்களும் ஆசிரியர்களும் தொழிலாளர் வர்க்கமாக அணிதிரள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், அதற்காக தொடர்ந்து உழைத்தவர்.
இனி சமூகத்தின் பொதுப்பயன்பாட்டிற்கு கல்வி கிடையாது என்ற சூழல் உருவாகியுள்ள இன்றையக் காலகட்டத்தில் பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்கள் மிக அதிகம் தேவைப்படுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி வேண்டி பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று கடிதம் தருவதும், ஆளுநருடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொண்டு ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்வோம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கூறுவதும், தமிழ்நாடு அரசின் கொள்கைத் தெளிவற்ற பலவீனமான நிலைப்பாட்டை விளக்குகிறது.
மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.
தொழிலாளர் வர்க்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அணிதிரள்வதே நமது மொழி, கல்வி உரிமையைக் காக்க உதவும். அத்தகைய வர்க்க ஒற்றுமையே பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செலுத்தும் மெய்யான அஞ்சலியாக அமையும்.
பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்! வீர வணக்கம்!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.