கட்டுப்பாட்டை இழந்த லாரி ! வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!
திருச்சி அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகம், NH 136– பெரம்பலூர் வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகில், 1–11–2025 ஆம் தேதி காலை 06.45 மணி அளவில் லாரி ஓட்டுநர் கனகராஜ் (34) S/o பழனிசாமி என்பவா் திருச்சி இனாம் குளத்தூரில் இருந்து, 359 கேஸ் சிலிண்டர்கள் (345 சிலிண்டர் 14kg, 14 சிலிண்டர் 5 kg) லோடு ஏற்றி வந்த Ashok Leyland TN 61 H 2929 பதிவெண் கொண்ட லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் சாலையின் இடதுபுற ஓரமாக கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் லாரி ஓட்டுனருக்கு தாவாங்கட்டையிலும் பின் தலையிலும் காயம் ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து ஏற்பட்டு சிறிது நேரம் கழித்து லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறி உள்ளது. தற்சமயம் மீதமுள்ள சிலிண்டர்கள் வெடிக்காமல் இருக்க வேண்டி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் வேறு யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் இல்லை. தற்சமயம் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு வருகிறார்கள். போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.