NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !
சமீபத்திய நீட் பிஜி 2025-26 சேர்க்கையில் சுமார் 811 இந்திய மாணவர்கள், தங்களது குடியுரிமையை “இந்தியர்” என்பதிலிருந்து (வெளிநாடு வாழ் இந்தியர்) என மாற்றியுள்ளனர்.
சட்டத்தில் உள்ள ஒரு நுணுக்கமான ஓட்டையைப் பயன்படுத்தி இந்த மாற்றம் நடக்கிறது.
இதில் பயன் அடைந்த அனைவரும் ( இவிஎஸ் ) என்கிற அறிய வகை ஏழைகள்…
உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பின்படி, ஒரு மாணவர் நேரடியாக வெளிநாட்டில் வசிக்கத் தேவையில்லை. அவரது ரத்த உறவுகள் ( பெரியப்பா, சித்தப்பா, அத்தை அல்லது தாத்தா, பாட்டி ) யாராவது வெளிநாட்டில் இருந்து, அவர்கள் அந்த மாணவரின் படிப்புச் செலவை ஏற்பதாக உறுதி அளித்தால் அந்த மாணவர் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர் ஆகிறார்.
811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.
மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களே இந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உதாரணமாக, 800-க்கு வெறும் 28 மதிப்பெண்கள் (3.5%) எடுத்த மாணவர் கூட இந்த ஒதுக்கீட்டில் உயர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளார்.
மறுபுறம், 215 மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுத்த சுமார் 60% மாணவர்கள், என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு எனும் ஏணி மூலம் முன்னணியில் உள்ள மருத்துவ இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.
சாதாரணப் பிரிவில் ஒரு இடத்தைப் பெற கடும் போட்டி நிலவும் சூழலில், என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் போட்டி மிகக் குறைவு. ஆனால் அதற்கான கட்டணம் மலைக்க வைக்கிறது:
தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ₹50லட்சம் முதல் ₹1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது….
ஆண்டுக்கு ரூ.1 ஒரு கோடிக்கு மேல் செலவு
செய்யும் EWS இருக்கிறார்கள் என்பது ரொம்ப
ரொம்ப முக்கியம் …








Comments are closed, but trackbacks and pingbacks are open.