விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்!
த.வெ.க.வின் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சையான முறையில் பொதுவெளியில் கருத்தை முன்வைத்திருந்தார். அவரது கருத்துக்கு ரஜினி ரசிகர்களிடமிருந்து மட்டுமின்றி, சக நடிகர்கள் சினிமாத்துறையினர் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அந்த விவகாரம் அத்தோடு முடிந்துவிட்டதாக கருதிய நிலையில், அதையும் உள்ளிட்டு விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான எதிர்வினையை பதிலடியாக கொடுத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
இந்த விவகாரம் குறித்து, சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் திராவிட ஜீவா அந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், ”விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் சுமார் திருச்சி கிழக்கில் 13,421 வாட்சப் எண்களுக்கும், பெரம்பூரில் 6987 எண்களுக்கும் விஜய்ன் போலித்தனம், கிரிமினல் புத்தி,குடும்பத்தைகூட கேவலப்படுத்தி சுயநலமாக வாழும் வக்கிர வாழ்வை வீடியோ மற்றும் கட்டுரைபோல் தொகுத்துஅனுப்பியிருக்கோம்.
எங்களது குழு சார்பில் அத்தனை பெயர்களும் ஆதாரத்துடன் இருக்கின்றது. அதில் 75% க்கு மேல் positive response ஒரு @rajinikanth ரசிகனாக என்னால் முடிந்த அளவுக்கு மேல் சக்திக்கு மேல் துரோகியை வீழ்த்த வேலை செய்துவிட்டேன். மிக்க நன்றி. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்குபுலி பதுங்கியது பாய்வதற்குத்தான். இப்போ வாங்கடா விஜய் ஆதரவு ஊடக paid journalist கும்பல்களே.
கண்ணா திராவிட ஜீவா களத்தில சூப்பர் ஸ்டாருடா … am waiting MAY 4th. விஜய் தோல்விக்கு நிச்சயம் ஒரு புள்ளியாவாது நான் நிச்சயம் காரணம்.” என்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார், திராவிட ஜீவா.
நேரடியாகவே, வாட்சப் வழியே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இந்த தகவல் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.