தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) (SRES) சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி !
தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) (SRES) சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் அகால மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியும், படு காயமடைந்த பயணிகள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும், தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும், பொன்மலை இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பாகவும் இன்று 05.06.2023 மாலை சரியாக 6 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.
![(எஸ்.ஆர்.இ.எஸ்) (SRES) சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி](https://angusam.com/wp-content/uploads/2023/06/எஸ்.ஆர்.இ.எஸ்-SRES-சார்பாக-மெழுகுவர்த்தி-ஏந்தி-மெளன-அஞ்சலி-2.jpeg)
மேற்படியான இரங்கல் நிகழ்ச்சியில் தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பணிமனை கோட்ட தலைவர் சகோதரர் திரு.L.பவுல் ரெக்ஸ், திரு.S.இரகுபதி, துணை பொதுச்செயலாளர், திரு.L.சேசுராஜா, தலைவர் பென்ஷனர் சங்கம், பொன்மலை திரு.M.ரெங்காசாரி, செயலாளர், பென்ஷனர் சங்கம், பொன்மலை திரு.ஏகாம்பரம், துணை தலைவர், திரு.ஜார்ஜ் ஸ்டீபன், திரு.S.பாலமுருகன், கோட்ட துணைத்தலைவர், திரு.K.ஞானசேகர்,உதவி கோட்ட செயலாளர், திரு.N.முகமது கோரி, உதவி கோட்ட செயலாளர், திரு.K.வெங்கட் நாராயணன், செயலாளர்/டீசல் கிளை, திரு.K.மதன்குமார்,உதவி கோட்ட செயலாளர் மற்றும் ஏராளமான முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், ஓய்வுபெற்ற தோழர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி மௌன அஞ்சலி செலுத்தினர்.*