இதய மலருக்கு  இறுதி அஞ்சலி!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

0

இதய மலருக்கு  இறுதி அஞ்சலி!

 

நள்ளிரவில் 2.21 மணி

2 dhanalakshmi joseph

(15.08. 2022)

பொழுது இத்தனைத்

- Advertisement -

- Advertisement -

துயருடன் விடியும்

என்று நான் ஒருபோதும்

எண்ணியதே

இல்லை.

ஆம்.

நாகப்பட்டினம்

ரம்யா…

நுரையீரல் புற்று நோயினால்

உடல் நலம்

பாதிக்கப்பட்டு

இயற்கை எய்தி விட்டார்.

சமூகப் போராளி

சலியாத உழைப்பாளி

 

துயருறும்

மனிதர்களுக்கு

விரைந்து சென்று

அவர்களுக்கான

வினை புரிந்து

அவர்கள் தம்

துயர் துடைத்தவர்.

ஆகஸ்ட் 25-செப் 9, 2022 அங்குசம் இதழில் வெளிவந்தது

கடும் மழையா

கடும் புயலா

பாதிக்கப்பட்ட

மக்கள் வாழும்

பகுதிகளில்

நீங்கள்

ரம்யாவைக்

காணலாம்.

 

இல்லம் தேடி

கல்வியாகட்டும்

ஏதும்

இல்லாதோர்க்குக்

4 bismi svs

கொண்டு சேர்க்கும்

சேவையாகட்டும்

ரம்யாவின்

அந்த ஒடிசலான

தேகம் அங்கே

நின்றிருக்கும்.

தன் துயர அழுத்தங்களை

தன் மனதுக்குள்ளே

பூட்டி வைத்து…

 

சக பிள்ளைகளின்

சக மனுசிகளின்

சக மனிதர்களின்

அன்றாட வாழ்வியல்

துயரங்களைக்

களைந்திட

தோள் கொடுத்திட

நம்மில் எத்தனை

நபர்களால்

இயன்றிடும்???

 

இடையறாது

அலைந்து திரிந்து

பிறர்

இன்னல்களைக்

களைந்திட்ட

அந்த

இதய மலருக்கு

நானே

இறுதி அஞ்சலிக் குறிப்புகள்

வரைவேன்

என்று

எண்ணவே இல்லை.

 

ஒரு

மலர்

உதிர்ந்து

விட்டது….

அவ்வளவு

தான்.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.