அட பழனி திருக்கோயிலில் பக்தர்களுக்கு இவ்வளவு சலுகைகளா ?
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் விரிவான விவரங்கள் :
* காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம்.
* கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு சுடு பால்.
* காலணி பாதுகாப்பு மையம்.
* பஞ்சாமிர்த பிரசாதம் 40 கிராம்.
* படிப்பாதையில் நீர்மோர் மற்றும் சுக்கு காபி.
* வாகனம் நிறுத்தம்.
* முடி காணிக்கை மையம்.
* கழிப்பறை, குளியலறை
* சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
* கிரி வீதியில் பேட்டரி கார் வசதி
* மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள்.
* கர்ப்பிணி பெண்கள் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு விரைவு தரிசனம்.
* கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி.
* முதலுதவி மருத்துவ வசதி.
* ஆம்புலன்ஸ் வசதி.
* சித்த மருத்துவ வசதி.
* மனநல காப்பகம்.
* கருணை இல்லம்.
* ஊக்கத் தொகையுடன் கூடிய நாதஸ்வரம் மற்றும் தவில் பயிற்சி பள்ளி.
* ஊக்க தொகையுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி.
* ஊக்க தொகையுடன் கூடிய வேத பாடசாலை.
* பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் பெரிய ஹால் வசதி.
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓராண்டிற்கு இரண்டு லட்சம் உணவுகள் என்று அனைத்து வகையிலும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
6-ஆம் நூற்றாண்டு திருநாவுக்கரசர் தர்ம சாலைகள் என்ற பெயரில் அப்பூதியடிகள் என்ற நாயன்மார் நடத்தியது போல பழநி திருக்கோயில் நிர்வாகம் நடைபெற்று கொண்டுள்ளது.
Respected Sir,
Very good information.
This information should be flexbanner form placed in bus stand, Railway station, bye pass road and all entrance of Palani.
Please update the Free lunch also provided to students of our Educational institutions.
Very nice & Planned for a good dharsan.