திருச்சி – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி காவல் உட்கோட்டம், கொள்ளிடம் 6. 148/25, U/s 126(2), 191(2), 191(3), 296(b), 118(1), 61(2), 351(3), 109, 103 BNS கொலை வழக்கில் கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் அசோக் 39/25 என்பவரை அதே கிராமத்தைச் சேர்ந்த 1) பிரபு என்ற வேலாயுதம் 30/25, த.பெ. பாலகிருஷ்ணன், 2) பிரவீன் என்ற சின்னத்தம்பி 28/25 த.பெ.பாலகிருஷ்ணன் மற்றும் 6 நபர்கள் சேர்ந்து கடந்த 29.05.2025-ஆம் தேதி வெட்டி கொலை செய்தது தொடர்பாக எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
06.06.2025 அன்று 343/25, U/s 309(4) r/w 311 BNS வழக்கில் இலால்குடி சந்தை அருகே கல்லக்குடி காவல் நிலைய போக்கிரி சரித்திர பதிவேடு ரவுடியான ராஜேந்திரன் 42/25 த.பெ கோவிந்தராஜ், கிழக்கு தெரு, ஆலம்பாக்கம், இலால்குடி தாலுகா என்பவர் முத்து 24/25 த.பெ மோகன், மாரியம்மன் கோவில் தெரு. தென்கல், இலால்குடி என்பவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி கொலை வழக்கு குற்றவாளிகளான A1 எதிரி பிரபு என்ற வேலாயுதம், A2 எதிரி பிரவீன் என்ற சின்னத்தம்பி மற்றும் வழிப்பறி குற்றவாளியான ராஜேந்திரன் ஆகிய மூவர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 20.06.2025-ஆம் தேதி சிறையில் உள்ள மூன்று எதிரிகளிடமும் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 46 தடுப்பு காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.