புனித சிலுவை கல்லூரியில் இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக இளைஞர் திறன் கொண்டாட்டத்தின் முன்னிட்டு இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது 29/07/2024 அன்று நடைபெற்றது.

கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியாளர் சுப்புரத்தின பாரதி
கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியாளர் சுப்புரத்தின பாரதி

Srirangam MLA palaniyandi birthday

இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையின் துணை மேலாளரும், கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியாளருமான சுப்புரத்தின பாரதி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சகிப்புத் தன்மை, வேகம், துடிப்பு, வலிமை, திறன் முதலான ஐந்து நிலைகள் கட்டாயம் வேண்டும் என்றும் இதனை வட்டம், சதுரம், முக்கோணம், சுருள் என்னும் நான்கு நிலைகள் மூலமாகவும் விளக்கினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

இதனை ஊது பைகள் கொண்டு அனைத்து மாணவர்கள் கைக்கும் மாற்றப்பட்டு விளையாட்டுடன் கூடிய புரிதலாக
பல்நோக்கு சிந்தனையுடன் சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி  தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி  முன்னிலையில் நடைபெற்றது.

கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியாளர் சுப்புரத்தின பாரதி
கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியாளர் சுப்புரத்தின பாரதி

இளங்கலை, இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா  இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

திட்ட அலுவலர்கள் முனைவர் மேரி ஷீலா முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, அவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.