தொழிலதிபர்களை குறிவைக்கும் பிஜேபி…

0

தொழிலதிபர்களை குறிவைக்கும் பிஜேபி…

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற ஒரு பரப்புரை வெகு தீவிரமாக செய்யப்பட்டு வருவதால் அரசியல் பாதையில் தங்களை வளர்த்துக் கொள்ள நினைக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பா.ஜ.க.வில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறார்கள். அந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபரான எம்.முருகானந்தம் என்பவர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள ஆயத்தமாகி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், திருவரம்பூர் தொகுதியில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி சார்பில் போட்டியிட்டு 14678 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஆகஸ்ட் 25-செப் 9, 2022 அங்குசம் இதழில் வெளிவந்தது

தேர்தலைத் தொடர்ந்து ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி வந்தன. தினமும் மாற்றுக் கட்சியினர் பலரும் அவரது இல்லங்களில் முற்றுகையிடுவது தொடர் கதையாகி வருகிறது. சமீப காலங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த காவி கட்சியினரே அதிகள வில் அவரது அலுவலகம் மற்றும் இல்ல வாசலில் குழுமியிருப்பது, முருகானந்தம் விரைவில் பா.ஜ.க.வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வார் எனத் தெரிகிறது.

எக்செல் குழும தலைவர்

நண்பர்கள் வட்டாரத்தில் MMM என்றழைக் கப்படும், பொறியியல் துறையில் வல்லுநரான எம்.முருகானந்தம், கடந்த 2006ம் ஆண்டு, EXCEL MARITIME 7 LOGISTICS PVT LTD என்ற நிறுவனத்தை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்து, 15 ஆண்டுகளில் EXCEL INFRA, EXCEL TRAVELS, EXCEL ENERGY, BEATS JOBS, ZEAL TOURS & EVENTS, SRI BALAJI ENGINEERING AND MD IMPEX என பல்வேறு தொழில் நிறுவனங்களை நிர்மானித்து, எரிசக்தி துறை, மனிதவளம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் தடம் பதித்து, 24ற்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை நிறுவி, தனது அனைத்து நிறுவனங்களின் எக்ஸல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக (EXCEL GROUP OF COMPANIES, CHAIRMAN & MANAGING DIRECTOR) செயலாற்றி வருகிறார்.

கின்னசில் சாதனை
எழுத்தறிவு, உறுப்பு தானம், கண்தானம், பெண்கள் தற்காப்பு, திருநங்கைகள் மீதான அன்பு, மாற்றுத் திறனாளிகள் முக்கியத்துவம், சுத்தம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூகத்தின் மிக முக்கியமான விஷயங்களில் சுமார் 2,00,000 இளைஞர்களை ஈடுபடுத்தியதன் மூலம் ஒரு மில்லி யனுக்கும் மேலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கின்னஸ் சாதனை செய்துள்ளார். திருச்சி, துவாக்குடி பகுதிகளில் உள்ள கல்குவாரி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரோட்டரி சேவை மூலம் சமூகப்பணி

கடந்த 27 ஆண்டுகளில் ரோட்டரி சேவை யுடன் ஏராளமான சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சர்வதேச ரோட்டரி இன்டர்நேஷனல் |USA-வின் மிக உயர்ந்தபட்ச விருதான SERVICE ABOVE SELF விருதை பெற்ற ஒரே இந்தியர் இவரே. ரோட்டரியில் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச நிதி வழங்கியதற்காக இந்தியாவில் ஒரு சிலரே உள்ள ARCH KLUMPH SOCIETY என்ற அமைப்பின் உறுப்பினராக ஆக உள்ளார். திருச்சியில் உள்ள 5 ஸ்பாஸ்டிக் குழந்தைகள் சேவை மையங்களை நிர்வகிக்கும், ஸ்பாஸ்டிக் சொசைட்டியின் நிர்வாக குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

இளைஞர் எழுச்சி பட்டறைகள்

இளைஞர்களுக்கென பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் மூலம் தலைமைத்துவ திட்டங்கள் குறித்து தமிழகம் மற்றும் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.
‘தி எக்செல் ஃபவுண்டேஷன்’ என்ற இவரது அறக்கட்டளையானது இளைஞர்கள், பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், ஸ்பாஸ்டிக் குழந்தைகள் வளர்ச்சிக்காகவும் செயல்படுவதோடு, மாலை நேர பயிற்சி மையங்களை ஆதரித்தும், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுதல், உடல் ஊனமுற்ற சிறுவர்கள், விபத்திற்குள்ளானவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொருளாதார பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பா.ஜ.க. கணக்கு

ஆளும் பா.ஜ.க. அரசு, நாடு முழுவதும் வருமான வரித்துறை மூலம் தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதும், அந்த தொழிலதிபர்கள் பிற்பாடு பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டு ரெய்டு சிக்கலிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதும் அரசியல் களத்தில் பலரும் அறிந்த ஒன்று தான். தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கங்களை அமைத்திடும் பணியினை முருகானந்தம் மேற்கொள்வதால் தமிழகத்தில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் பலரும் முருகானந்தத்திற்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக தமிழகம் முழுக்க வலம் வந்ததால் அவரது தொடர்புகள் பலவும் தமக்கு உதவும் என தமிழக பா.ஜ.க. கணக்கிடுகிறது.
என்ன விலை கொடுத்தேனும்…

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்ன ‘விலை’ கொடுத்தேனும்

தமிழகத்திலிருந்து குறைந்தது 12 நாடாளுமன்ற தொகுதியிலாவது வென்றிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் பா.ஜ.க., தமிழகத்தில் அரசியல் செய்ய தேவையான பொருளாதார பலம் பெறவும் தமிழக தொழிலதிபர்களை கட்சிக்குள் கொண்டு வர முருகானந்தம் ஒரு ‘டூ’லாக இருப்பார் என்பதாலும் அவரை கட்சிக்குள் இணைத்து தமிழகத்தில் அடுத்தகட்ட அரசியல் விளையாட்டை நடத்திட பா.ஜ.க. தயாராகி வருகிறது.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.