அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மொட்டை அடிக்க லஞ்சம் ! கோயில் செயல் அலுவலருக்கு சிறை தண்டனை!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வாகைகுழ விஸ்தரிப்பைச் சேர்ந்த  ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன் (இறப்பு 11.12.2021) என்பவர் பரம்பறையாக மணப்பாறை, அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 02.06.2011 அன்று மதியம் சுமார் 2 மணிக்கு பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்காக கோயில் உள்ளே அலுவலகம் வழியாக சென்றபோது, செயல் அலுவலர் வினாயகவேல் அவர்கள் புகார்தாரர் மணிகண்டனை சந்தித்து நீ இங்க தொடர்ந்து மொட்டை அடிக்கிற தொழில் பண்ணனும்னா தனக்கு ரூ.1000/- கொடுக்கனும் என்று கேட்டு, பின்னர் ரூ300/- குறைத்து ரூ700/-லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அன்றே 02.11.2011 திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது புகார்தாரர் மணிகண்டனிடமிருந்து மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் எதிரி விநாயகவேல் லஞ்சப்பணம் ரூ.700/-கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செயல் அலுவலர் வினாயகவேல்
செயல் அலுவலர் வினாயகவேல்

இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து இன்று 28.11.2025 எதிரி விநாயகவேல், வயது 59/2025, முன்னாள் செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம் என்பவருக்கு, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன்  ஆஜராகி தண்டணை பெற்று தர உதவி புரிந்துள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.