சமையல் குறிப்பு – கேஷ்யூ ஃப்ரை!

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி கேஷ்யூ ஃப்ரை. ஈஸியா செய்திடலாம். முந்திரி விக்கிற விலைக்கு கேஷ்யூ ஃப்ரை பண்றது சாத்தியம் இல்லதா பட் இது ஒரு புதுவித டேஸ்ட்டா இருக்கும் வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

முந்திரி 200 கிராம், கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன், இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன், நெய் தேவையான அளவு, கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு 2 ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு 3 ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சேர்த்து முந்திரி, கருவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசிறவும் (பிசைய கூடாது). எண்ணெய் காய்ந்ததும் அதில் மாவை பக்கோடாக்களாக ஒவ்வொரு முந்திரி வருமாறு கில்லி போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும். அதன் மேல் பொறித்த கருவேப்பிலை கொத்தை வைத்து அலங்கரித்து பரிமாற கொடுங்கள். சுவை நன்றாக இருக்கும்.

 

—    பா. பத்மாவதி

Comments are closed, but trackbacks and pingbacks are open.