அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“குண்டு போடும் தெரு”  ஒரு சின்ன கேள்வியிலிருந்து வெடித்த அனுபவம்!-அனுபவங்கள் ஆயிரம் (4) 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பலருக்குள்ளும் சில சின்னச்சின்ன கேள்விகள் இருக்கும்… குழந்தைத்தனமான, ஆனா மனசை விட்டு போகாத கேள்விகள்.

அதை யாரிடமாவது கேட்டால் உடனே வடிவேலு பாணியில் “என்ன சின்ன பிள்ளைத்தனமான கேள்வி ராஸ்கல்… போய் வேலைய பாரு!” ன்னு சொல்லிவிடுவாங்க!

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அது மாதிரி தான் எனக்கும் ஒரு கேள்வி. நான் சேலம். சனிக்கிழமை தோறும் கோட்டை பெருமாள் கோவில் செல்வது வழக்கம்.

கோவில் செல்லும் வழியில் ஒவ்வொரு முறையும் ஒரு தெருவை கடந்து செல்வேன். அதுல ஒரு பெயர் பலகை எப்போதும் கண்களில் விழும் “Fire Gun Street” தமிழில் சொன்னா “குண்டு போடும் தெரு!”

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சேலத்தில் ஆங்கிலேயர் காலத்து `குண்டு போடும் தெரு'... பெயர் காரணம் இதுதான்! | History of the `gun firing street' in Salem - Vikatanஅடா, ,ரூம் போட்டு யோசிச்சாங்களோ?

எப்போதும் மனசுக்குள்ள யோசனை  “யாரிடயாச்சும் கேட்டுடலாமா?”

ஆனா கேட்டது இல்லை…

இப்போ தான் நினைச்சேன் “கூகிள் இருக்கே! அதைத்தான் கேட்டுப்பார்ப்போம்!”

கூகிள் சொன்ன கதை கேட்கணுமா?

அது வெறும் தெரு பெயர் இல்ல, பீரங்கி வரலாறு!

1760-1820 காலகட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்த பகுதியில் ஒரு பீரங்கி கொண்டு வந்தது. அது சேலம் கோட்டையை பாதுகாக்க வைக்கப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சேலத்தில் ஆங்கிலேயர் காலத்து `குண்டு போடும் தெரு'... பெயர் காரணம் இதுதான்! | History of the `gun firing street' in Salem - Vikatanபிறகு கோட்டை இடிக்கப்பட்ட பின்பு, அந்த பீரங்கியை இப்போதைய குண்டு போடும் தெருவில் நிறுத்தினர்.

அதன் பின் என்னன்னா. அவர்கள் தினந்தோறும் நண்பகல் 12 மணிக்கு பீரங்கி வெடித்து நேரம் அறிவித்தாங்க!

அது பின் 1873க்குப் பிறகு இரவு 8 மணிக்கு வெடித்தது.

அப்போ அந்தக் குண்டின் சத்தத்துக்கே மக்கள் நேரம் பார்த்தாங்க!

“அடா 8 மணி ஆச்சு, பீரங்கி சத்தம் வந்துச்சு!”

அந்தக் காலத்து அலாரம் அதுதான்!

1950க்குப் பிறகு பீரங்கி ஓய்வுபெற்றது.

ஆனால் அந்தத் தெருவுக்கு பெயர் மட்டும் ஓய்வு பெறல!

அது இன்றும் பெருமையோடு “குண்டு போடும் தெரு” என்றே அழைக்கப்படுகிறது.

இப்போ அந்த தெருவை கடக்கும்போதெல்லாம் அந்த  காலத்தில் மக்கள் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள் , இப்போ இங்கு இருக்கும் மக்கள் அட்ரஸ் எழுதும் போது எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது சிரிப்பு வந்துதான் தீரும்.

 

—   மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.