களைக்கட்டும் தீபாவளி – நெரிசலில் சிக்கித் தவிக்கும் சாத்தூர் மக்கள்.. ! பாதுகாப்பு பணியில் போலீசார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாத்தூரில் களைக்கட்டும் தீபாவளி விற்பனை…..
கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்…… பாதுகாப்பு பணியில் போலீசார்….

தமிழகத்தில் நாளை கொண்டாடவர்க்கும் தீபாவளி பண்டிகை ஒட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சாத்தூர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கி செல்கின்றனர். இதனால் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மெயின் ரோடு முழுவதும் கிருஷ்ணன் கோவில் வரை உள்ள வணிக வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. தீபாவளிக்காக நடைபாதை கடைகள் அதிகம் உருவாகி உள்ளது. இதில் பொதுமக்கள் வியாபாரம் செய்வதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இதனால் வாகனங்கள் சென்று வரவும் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்லவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொது மக்களின் பாதுகாப்பிற்கும் போக்குவரத்தை சரி செய்வதற்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கூட்ட நெரிசலில் திருடு போவதை தடுப்பதற்கு முக்கிய வீதிகளில் சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வெளிப்புறமும் இருக்க வேண்டும் என்று போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கியில் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிதாக திருமணமான மணமக்களுக்கு சீர் செய்வதற்காக முறுக்கு அதிரசம் இனிப்புகள் உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.