நாடு தழுவிய பொது வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம்.
2025 ஜீலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்த தயாரிப்பு திருச்சி மண்டல அளவிலான அனைத்து மத்திய தொழிற்சங்கம் பங்கேற்ற ஆலோசனை கூட்டம். ஜூன் 15 மாலை 6:30 மணி அளவில் தொமுச அலுவலகத்தில் S.ஜோசப் நெல்சன் LPF மாவட்ட செயலாளர் தலைமையில் S.ரெங்கராஜன் Citu மாவட்ட செயலாளர், க.சுரேஷ் AITUC மாவட்டபொது செயலாளர், Fx ஜான்சன் HMS மாநில செயலாளர், சேசுராஜ்-INTUC AICCTU – அருண் UTUC – சிவ செல்வன் மற்றும் தொமு மாநில பேரவை செயலாளர் எத்திராஜ் AITUC மாவட்ட தலைவர் நடராஜா Citu, மாவட்ட பொருளாளர் மணிகண்டன். UTUC – செந்தில் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.)ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் தயாரிப்பு திருச்சி மண்டல மாநாட்டை 26 .6 .25 வியாழன் மாலை 4:00 மணிக்கு பி ஹெச் இ எல் தொமுச கூட்ட அரங்கில் நடத்துவது இதில் ஒன்பது மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
2.)மறியல் வேலை நிறுத்தம் கோரிக்கை விளக்க துண்டு பிரசுரம் மேலும் 5000 வெளியிடுவது.
3.)துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கம் ஜூலை 1ஆம் தேதி மாலை மரக்கடையில் இருந்து துவங்கி மார்க்கெட் பகுதி முழுவதும் வழங்குவது அனைத்து சங்கங்களிலிருந்து 50 பேருக்கு குறையாமல் பங்கேற்கச் செய்திடுவது 3.7.25 தேதி மத்திய பேருந்து நிலையம் பகுதி 5 .7.25ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்குவது.
4.)ஜூலை 9ஆம் தேதி மறியல் ஊர்வலம் தென்னூர் மகாத்மா காந்தி பள்ளியில் அருகில் இருந்து புறப்பட்டு சாஸ்திரி ரோடு பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
5)துறைவாரி சங்கங்கள் மின்சாரம் போக்குவரத்து, நுகர் பொருள் வாணிபக் கழகம், பி எச் இ .மற்றும் மத்தியதர சங்கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே கூட்டு நடவடிக்கை பேசி பிரச்சார வாயிற் கூட்டங்களை நடத்துவது.
6)மண்டல மாநாட்டில் அனைத்து மத்திய சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.. போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.