கொரோனா தற்போதைய நிலை – பீதி தேவையா? எச்சரிக்கை தேவையா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இதே மே மாதம் அப்படியே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 நமது நாடு கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் டெல்ட்டா அலையைச் சந்தித்துக் கொண்டிருந்தது.

இன்னும் நம்மை விட்டு அந்த கொடும் நினைவுகள் நீங்கியபாடில்லை.  எனவே கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் மரணங்கள் நியாபகம் வருகின்றன.

Kauvery Cancer Institute App

லாக் டவுன் மற்றும் அது சார்ந்த தனிநபர் சுதந்திரத்தில் அத்துமீறல்கள் நியாபகம் வருகின்றன.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக நடந்த பொருளாதார முடக்கங்கள் என்று நமது மனதில் ரணங்கள் மட்டுமே நியாபகம் வருகின்றன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதனால் கொரோனா என்ற பேச்சை எடுத்தாலே “பீதியும் கவலையும்” தான் வருகின்றது.

இப்போது கொரோனா நிலைமை அத்தகைய பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா ? என்று கேட்டால்

அறிவியல் பூர்வமாகவும் நிகழ் தகவுகளின் ஆதாரங்களின் அடிப்படையிலும்

இல்லை, இல்லை, இல்லை என்பதே பதில்.

கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக  இருக்கலாம் - BBC News தமிழ்கொரோனா வைரஸைப் பொருத்தவரை அது தன்னகத்தே சில பல உருமாற்றங்களை செய்து ஆறு முதல் பத்து மாதங்களுக்கு ஒருமுறை,

தனக்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையும் போது பொதுமக்களில் பெரும்பான்மையினருக்கு தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குன்றும் போது ஒரு ரவுண்ட் வந்து செல்கிறது. இதைத்தான் நாம் அலை என்கிறோம்.

ஆனாலும் இப்போது நம்மை வருடும் கொரோனா அலை – பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதுவே மே 2021 இல் நம்மை தாக்கிய கொரோனா சுனாமி நம்மில் பலரை வாரி சுருட்டிச் சென்றது. இதற்குக் காரணம். தற்போது 2020 முதல் 2025 வரை

நாம் பற்பல கொரோனா வைரஸின் முகங்களை பல அலைகளாக வருடந்தோறும் அடைந்து அதற்குரிய எதிர்ப்பு சக்தியை நம்மில் பெரும்பான்மையினர் பெற்றுள்ளோம்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் என்பி.1.8.1  (NB.1.8.1) என்ற இந்த உருமாற்ற திரிபு வகை உலகம் முழுவதும் கண்டறியப்படும் மாதிரிகளில் 10.7% என்ற இடத்தில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

இதன் ஆதி மூதாதை யாரென்று பார்த்தால் அது ஜேஎன்.1 திரிபு அதன் மூதாதை  – ஓமைக்ரான் திரிபாகும்.

எனவே ஓமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த அதன் சந்ததி  திரிபு வகைகளே தற்போது வரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸின் உருமாற்றத்தை ஆராய்ச்சி செய்து TAG-VE (TECHNICAL ADVISORY GROUP OF VIRUS EVOLUTION)

தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது  – தற்போது உலகின் பிரதான திரிபுகளாக பரவி வரும் LP.8.1 மற்றும் NB.1.8.1 ஆகியவற்றை ஆராய்ச்சி செய்த வரை இவற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த குந்தகமோ ஊறுநிலையோ அச்சுறுத்தலோ விளையும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதே ஆகும்.

இந்தியாவில் தொற்று அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணம் – பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.

கூடவே தற்போது கொரோனா வைரஸ் சற்று வேகமாக பெருநகரங்களில் பரவி வருகிறது. அதனால் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

எனினும் வீரியமுள்ள வைரஸாக அது பரவவில்லை.

ஆக்சிஜன் தேவைப்படுபவர்களோ

ஐசியூவில் அட்மிட் ஆகுபவர்களோ

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இறப்பவர்களோ தொற்றாளர்கள் உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப நாம் அச்சம் கொள்ளும் அளவில் உயரவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கடந்த ஜூலை 2024 ஆம் ஆண்டு உலகில் கொரோனா எந்த நிலையில் இருந்ததோ அதே நிலை இந்த ஆண்டும் உள்ளது.

2023க்குப் பிறகு இதே போன்ற நிலை தான் உலகம் முழுவதும் நீடித்து வருகிறது. எங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அலை ஏற்பட்டதாக பதிவில் இல்லை. மேலும் 2020 முதல் 2023 வரை கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை 2023 க்குப் பிறகு அதனால் ஏற்படுத்த முடியவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.

சேலத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு |  Are 9 people infected with coronavirus in Salem? - Health officials denyஇப்போது கொரோனா மரணங்கள் என்று செய்திகள் வருகின்றனவே ?

அதற்கு நாம் அச்சம் கொள்ள வேண்டுமா?

நான் உங்களுக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன்

நாள் ஒன்றுக்கு காச நோய்க்கு(Tuberculosis)

நம் நாட்டில் 900 பேர் மரணிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 300+ பேர் வயிற்றுப் போக்கு நோயினால் மட்டுமே மரணிக்கின்றனர்.

இதை நான் கூறக்காரணம்

ஒரு தொற்று நோய் என்றால் அதற்கு மரண விகிதங்கள் கண்டிப்பாக இருக்கும்.

ஆனால் அது பொது சுகாதார ஸ்திர நிலையை அச்சுறுத்தும் வகையில் இல்லாத வரை நாம் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இன்று இந்தியாவில் இறந்த ஐந்து நபர்களின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தேன்.

கேரளாவில் 80 வயது முதியவர் மரணித்துள்ளார். அவருக்கு நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்கனவே உள்ளது

மஹாராஷ்ட்ராவில் 70 வயது மற்றும் 73 வயது முதியோர் இருவருக்கும்  நீரிழிவு ரத்தக் கொதிப்பு உண்டு. தமிழ்நாட்டில் இறந்த 69 வயது முதியவருக்கு நீரிழிவு கூட பார்கின்சன் நோய் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இறந்த 43 வயது நபர் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவிய தீவிர தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் கோவிட் நுரையீரல் நியுமோனியா மட்டுமே இறப்புக்கான காரணமன்று. மாறாக இவர்கள் பல்வேறு காரணங்களால் இறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போது கோவிட் தொற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பாசிடிவ் என்று வந்து அதனால் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம்.  இதை தற்செயலாக கோவிட் கண்டறியப்பட்ட நபர் (INCIDENTAL COVID DIAGNOSIS ) என்று கூறுவோம்

தயவு கூர்ந்து நம் மக்கள் யாரும்

பீதி நிலைக்குச் செல்ல வேண்டாம்

அதே சமயம்

ஒரு சுவாசப் பாதை தொற்று சமூகத்தில் பரவும் போது அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் கைகளை கண்ட இடங்களில் வைக்காதிருத்தல் கைகளை சோப் போட்டுக் கழுவுதல் தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை வைத்துக் கொள்ளுதல் மற்றும் எதிர்ப்பு சக்தி குன்றியோர் முக்ககவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை வழக்கம் போலக் கடைபிடிக்கலாம்.

பீதி தேவையன்று எச்சரிக்கை உணர்வே போதுமானது

 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.