புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு எச்சரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார் அவருக்கு வெளிநாட்டில் இருந்து முகம் தெரியாத நபர் ஒருவர் பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி உள்ளார். அதை ஏற்ற இவர் அவருடன் நட்பாக பேசிய பழகியுள்ளார் பின்னர் இவருக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறியுள்ளார்.

பின்னர் பரிசுப் பொருட்கள் உள்ள பார்சலின் புகைப்படத்தை இவருக்கு அனுப்பி உள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லி கஸ்டம்ஸ் இருந்து பேசுவதாக கூறி இவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் இவருக்கு வந்துள்ள பார்சலில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு பணங்கள் உள்ளதாகவும் இவை அனைத்தும் அனுமதி இல்லாமல் அனுப்பப்பட்டது என்று கூறி இவரை கைது செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

எச்சரிக்கை பதிவுஅதற்கு பயந்து போன இவர் இவரை கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு 5 லட்சம் பணத்தை குற்றவாளிகளுக்கு அனுப்பி உள்ளார்.

ஆகையால் இணைய  வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிப்பது என்னவென்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளின் மூலம் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்பினை ஏற்க வேண்டாம் மற்றும் பிரண்ட் ரெக்வெஸ்ட் ஏற்க வேண்டாம் என்றும் அவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.