பருப்பு வடையில் செத்த எலி – குளித்தலை மக்கள் அதிர்ச்சி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பருப்பு வடையில் செத்த எலி – குளித்தலை மக்கள் அதிர்ச்சி- 

பலகார கடையில் வாங்கிய பருப்பு வடையில் செத்த எலி. வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் மருத்துவமனையில் சிகிச்சை. கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் பகுதி அக்ரஹாரம் செல்லும் வழியில் பாபு என்பவர் பல ஆண்டுகளாக டீ மற்றும் பலகார கடை இரவு பகலாக நடத்தி வருகிறார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

பருப்பு வடையில் செத்த எலி - கடைக்கு அதிகாரி சீல்
பருப்பு வடையில் செத்த எலி – கடைக்கு அதிகாரி சீல்

இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் கார்த்தி வயது 33.
இவர் இன்று மதியம் பாபு டீ மற்றும் பலகார கடைக்கு சென்று போண்டா மற்றும் பருப்பு வடை வாங்கி உள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பருப்பு வடையை பாதியை தின்றபோது வடைக்குள் எலி செத்த நிலையில் ‌ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடை உரிமையாளர் பாபு விடம் கேட்டபோது அது ஒன்றும் செய்யாது.சிறிய எலி தானே என்று பதில் அளித்துள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பருப்பு வடையில் செத்த எலி
பருப்பு வடையில் செத்த எலி

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரப்பியது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பொருட்களை கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர்.

பாதிக்கப்பட்ட எலக்ட்ரீசியன் கார்த்திக் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலயல் உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கர் கரூரில் இருந்து வந்து கடையை ஆய்வு செய்து பின்னர் கடை உரிமையாளர் பாபுவிடம் விசாரணை செய்தார் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திகை சந்தித்து விசாரணை செய்தார்.

– நௌஷாத்,

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.