முதல்வருக்காக அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதல்வருக்காக  அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !

200 க்கும் மேற்பட்ட கடைகளை 48 மணி நேரத்தில் காலி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக புகார் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் பூ , பழம் , வாழை இலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் 200 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு‌.க. ஸ்டாலின் , வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார் . சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை ஆகியவற்றை திறப்பதற்காக ஸ்டாலின் வருகை புரிகிறார் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி . பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி , இன்று காலை முதலே மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்
அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள்

முதலமைச்சர் வருகைக்காக எங்களின் கடையை அப்புறப்படுத்துவது வேதனை அளிக்கிறது .மாற்று இடத்தில் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் அந்த பகுதியில் கடைகள் அமைத்தால் எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது .

எனவே முழுமையாக அந்த இடத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் கடைகளை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம். வேண்டுமென்றால் முதலமைச்சர் வருகைக்காக இரண்டு தினங்கள் அனைத்து கடைகளை விடுமுறை கூட விட்டு விடுகிறோம் .

ஆனால் உடனடியாக கடைகளை காலி செய்ய முடியாது என்று கூறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துவது வேதனை இருப்பதாக கூறி பூ வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

– சோழன்தேவ்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.