அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக, அதிமுக இருவரும் கூட்டு களவாணிகள் ! சீமான் ஆவேசம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

மயிலாடுதுறையில் நடைபெறும் பெரியாரை போற்றுவோம் நிகழ்வில் பங்கேற்பதற்காக  திருச்சி விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்…. என் இன மக்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் கொன்று குவித்தது இந்த நாட்டு ராணுவம் அதை அனுப்பியது ராஜீவ் காந்தி. என் இனத்தையே அழித்தவர்களுக்கு அந்த அளவிற்கு நாம் இடம் கொடுத்து விட்டோம் அவர்களுடன் கூட்டணி வைத்து எந்த தமிழ் மக்களை கொன்று குவித்தார்களோ அவர்களின் வாழ்க்கையை வாங்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொடுத்ததால் இன்று எங்கள் தலைவரை வைத்தால் நாங்கள் வரமாட்டோம் என்கின்றார்கள். தன்மானமிக்க தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவெடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் அவர்கள் மாறி மாறி கூட்டணி வைத்து இது போல் பேசுகிறார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.

திராவிடம் தமிழை எங்கே காக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதுவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை , இலக்கியம் ,வரலாறு அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுட சொன்னவர் பெரியார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான். திருமாவளவன் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பேசுகிறார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழ்த் தேசியத்துக்கு திராவிடம் எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்” -  சீமான்அறநிலையத்துறை அமைச்சர் அறத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறார். பொங்கலுக்கு இலவச பரிசு பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. போராடக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது கொடுந்துயரம். ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். மதுவுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை. எல்லாத் துறையை சேர்ந்தவர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையிலும் நாங்கள் நல்ல ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடுவதற்கு காரணம் அவர்களே தான். அவர்கள் தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் இந்த அரசு அமையாமல் தடுத்திருக்க முடியும். போதை பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. தெருவுக்குத் தெரு சாராயக்கடையை திறந்து வைத்துவிட்டு விற்பனையை அதிகப்படுத்தும் நீங்கள் போதைப் பொருளை தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை ஆதரவில்லாமல் போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் என கூறுவது மக்களுக்கு என்ன பிரச்சனை என தெரியாமலே ஆட்சி செய்கிறீர்களா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த மண்ணில் நிலவுகிற திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும் ஆனால் ஆட்சி முறை மாறாது.
காங்கிரஸ் – பாஜக, திமுக – அதிமுகவிற்கு எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது.  திமுகவிற்கு மாற்று அதிமுக என கூறுவது வெறும் வார்த்தையில் தான் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் உள்ளிட்டவற்றில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருவரும் கூட்டு களவாணிகள், தமிழ்நாட்டை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தீய சக்திக்கு மாற்று தூய சக்தி, தூய ஆற்றல் தான், எங்களைப்போல தொடர்ச்சியாக மாறுதலுக்காக போராடும் பிள்ளைகள் தான் மாற்றாக இருக்க முடியும். கோட்பாடு அளவில் நீங்கள் திராவிடம் நாங்கள் தமிழர்கள் தமிழ் தேசியம் . தத்துவ மாற்று தான். நீங்கள் லஞ்சம்ங்கறீங்க நாங்கள் உண்மை நேர்மை என்கிறோம். நீங்கள் திராவிடம் என்கிறீர்கள் நாங்கள் தமிழர்கள் என்கின்றோம் இதுதான் மாற்றமாக இருக்க முடியும் என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.