திமுக அரசு விரைவில் கவிழும் –  எடப்பாடி பழனிசாமி 

கைதியாக இருப்பவர் அமைச்சராக இருக்க முடியுமா? செந்தில் பாலாஜிக்கு கைதி நெம்பர் கொடுக்கப்பட்டு விட்டது.

0

திமுக அரசு விரைவில் கவிழும் –  எடப்பாடி பழனிசாமி

திமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாலும்  மத்திய அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளாலும் விரைவில் திமுக அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த அமரகுந்தி பகுதியில் பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளில் இருந்து 3500 பேர் அதிமுகவில் இன்று தங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  இணைந்தனர் .

இதற்கான விழா இன்று அமரகுந்தி பகுதியில் நடைபெற்றது. அங்கு கட்சியில் இணைந்த இணைந்தவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அப்போது அவர் கூறுகையில்,  ” நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி அதிமுக ஒன்று தான். புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, அதிமுக. அம்மா அவர்கள் கண் இமை காப்பது போல கட்சியை காத்தார்.இந்த இயக்கம் வரலாறு படைத்த இயக்கம்.

அம்மா மறைவிற்குப் பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை உருவாக்கினர். அதிமுக மூன்றாக போய்விட்டது. இனி அந்த கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்றெல்லாம் கூக்குரலிட்டனர் . ஆனால் அதிமுக 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள்.

இதில் சிலர் எட்டப்பர்கள் இருந்ததால் ஆளும் தகுதியை பெற முடியவில்லை. அவர்கள் இன்று வெளியேறி விட்டனர். சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.

அதிமுகவை அழிப்பதற்கு உடைப்பதற்கு, முடக்குவதற்கு இன்றைய முதலமைச்சர் எவ்வளவோ முயற்சி செய்தார். இப்பொழுது உங்களது துணையோடு அவரின் முயற்சி முறியடிக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவை எந்த கொம்பனாலும் இனி அசைக்க முடியாது. முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு மூன்று முறை வந்திருப்பார் என கருதுகிறேன்.

அவர் தனது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்திற்கு என்ன செய்தார்?  நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார்.

யார் பெற்றெடுத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. மேச்சேரி சாலைக்கு அவர் பெயர் வைக்கிறார். இந்த திட்டம் நாங்கள் கொண்டு வந்தது.

,அதிமுக ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டம். சட்டக் கல்லூரி திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம். அப்போது சட்டக் கல்லூரிதொடங்கிவிட்டது. அந்த கட்டிடத்தையும் இப்போது திறந்து வைத்திருக்கிறார்.

இந்த பகுதி வறண்ட பகுதி .நூறு வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கேட்டனர்.இதற்கு ரூபாய் 562 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

முதற்கட்டமாக ஆறு ஏரிகளுக்குதண்ணீர் நிரப்பி விவசாயிகள் வயிற்றில் பால்வார்த்தோம். ஆனால் இந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

கடலில் கலக்கும் தண்ணீரை 100 ஏரிகளுக்கு நீரை திருப்பி விவசாயம் செழிக்க இந்த திட்டம் கொண்டு வந்தோம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அனைவரும் பெருந்தன்மையோடு பாராட்டி இருப்பார்கள்.

இப்போது இந்த ஆட்சி எப்போது போகும் என பொதுமக்கள் எண்ணுகிறார்கள். இந்தத் திட்டம் அற்புதமான திட்டம்.இந்தத் திட்டம் நிறைவேற்றி இருந்தால் விவசாயிகள் பயனடைந்து இருப்பார்கள் .

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் அப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் போல தரமான சாலைகள் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் பல துறைகளில் தேசிய விருது பெற்றோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உள்ளாட்சித் துறையில் 140 தேசிய விருதுகள் பெற்றோம்.இது அதிமுக சாதனை. திமுக ஆட்சியில் இந்த இரண்டு ஆண்டில் ஒரு பேருந்து கூட வாங்க முடியவில்லை.

எந்த நிர்வாகத்திலும் கவனம் இல்லை. எல்லாத் துறையும் சீரழிந்து விட்டது. ஒரே ஆண்டில் பதினோரு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். ஒரு மருத்துவ கல்லூரி கூட உங்களால் கொண்டு வர முடிந்ததா?

ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா கொண்டு வந்தோம். இது சாதாரண விஷயம் இல்லை.இந்தத் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர்.

தமிழக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயனடைய இந்தத் திட்டம் கொண்டு வந்தோம். நான் வெளிநாடு சென்று கலப்பின ஆடுகள், மாடுகள் உருவாக்க ஆராய்ச்சி நிலையம் அங்கு கொண்டு வந்தோம். ஆனால்ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா போல வெளிநாடு சென்று வந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள்?  தொழில் முதலீட்டு மாநாடு  நடத்தினோம். நாங்கள் அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கொண்டு வந்தது தான் இப்போது வரும் புதியபுதிய தொழிற்சாலைகள் வருகிறது.

முன்னாள் நிதி அமைச்சர் பேசிய பேச்சு ஆடியோ வெளியானது. பொதுமக்கள் சொல்லவில்லை எதிர்க்கட்சியினர் சொல்லவில்லை அவர்களது அமைச்சரவையில் இருந்தவர் கூறி இருந்தார்.

3500 பார் டெண்டர் விடாமல் வருமானம் எங்கேயோ சென்று இருக்கிறது. முதலில் பாரில் குறிப்பிட்ட நேரம் தான் விற்க வேண்டும் ஆனால் 24 மணி நேரமும் மதுவிற்கப்பட்டது. அரசின் வருவாய் மேல் இடத்திற்கு செல்கிறது. இப்போது இரண்டாவது ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் மூணாவது ஆடியோ வரப்போகிறது என பேசிக்கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவரை பார்த்து வந்த  முதலமைச்சர்,என்னை தொட்டுப்பார் சீண்டி பார்என என கூறி உள்ளார்.

ஒரு அமைச்சர் நீதிமன்றத்தின் மூலம்  விசாரணைக்கப்பட வேண்டும்.போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் போது இப்போது உள்ள முதலமைச்சர் கரூரில் பேசும்போது,லஞ்சம் வாங்கி பதவி கொடுத்து இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என பேசி இருந்தார்.

ஆனால் இப்போது என்ன பேசுகிறார். பழி வாங்குகிறார்கள் பழி வாங்குகிறார்கள் என ஸ்டாலின் கூறுகிறார் . எதிர்கட்சிதலைவராக இருந்த போது நீங்கள் பேசியது தானே. அந்த புகாரின் பேரில்தான் அமலாக்கத் துறையினர் விசாரிக்கிறார்கள்.

முதலமைச்சர் வேண்டுமென்றே திட்டமிட்டு நாடகத்தை நடத்துகிறார். செந்தில் பாலாஜி ஊழல் வாதி. கைதியாக இருப்பவர் அமைச்சராக இருக்க முடியுமா? செந்தில் பாலாஜிக்கு கைதி நெம்பர் கொடுக்கப்பட்டு விட்டது.

கைதியை அமைச்சராக வைத்துக் கொண்டு இருக்கலாமா?ஆளுநரை சந்தித்து மனும் கொடுத்து விட்டோம். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க . வேண்டும். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடக்கிறது என்றால் தமிழகத்தில் தான்.

ஆனால் முதலமைச்சர் வளர்ச்சி அடைந்து உள்ளது என கூறுகிறார் ஊழலில் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி.தொண்டனும் முதலமைச்சராக முடியும்.

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ ஆகலாம் .எம்பியாகலாம்.ஜனாதிபதி ஆகலாம். உங்கள் ஆட்சி தானாக கவிழப்போகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாரதப் பிரதமரையே தேர்ந்தெடுப்பாராம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இங்கு ஆட்சி நடத்த முடியாதவர் பிரதமரை தேர்வு செய்கிறாராம். மக்களை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து திமுகவினரை வீட்டிற்கு அனுப்புங்கள்.

தற்போது  திமுக கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் காவிரி பிரச்சனைக்கு பேசினார்களா விவசாயிகள் பிரச்சனைக்கு  பேசினார்களா? நாடாளுமன்றத்தை ஒரு நாள் உங்களால் ஒத்திவைத்த முடியுமா. 38 பேர் வெற்றி பெற்று பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இங்கு 3500 பேர் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .” என்று  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.