சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் : அமைச்சர் தங்கம் தென்னரசு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள்” உறுதிமொழியை ஏற்க வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதி மொழி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“சமத்துவ நாள்” உறுதிமொழி
“சமத்துவ நாள்” உறுதிமொழி

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அதன்படி சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதியின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர் அண்ணல் அம்பேத்கர். அவர் ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்தவர். நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இனியவன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.

 

—  மணிபாரதி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.