மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்கள் ஆகும் தி.மு.க.வினர்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

கழக வேட்பாளர்கள்  அறிவிப்பு
கழக வேட்பாளர்கள் அறிவிப்பு

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

தி.மு.க. வேட்பாளர்களாக

1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

சல்மா:

சல்மா என்கிற ரொக்கையா மாலிக் ,எளிய இசுலாமிய குடும்பத்தில் இருந்து வந்த பெண்மணி.

திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராக பணியாற்றிய சல்மா, 2006 இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாடு சமூக நல வாரியத்தலைவராக பணியாற்றியுள்ளார்.

சல்மா
சல்மா

கவிதை, நாவல் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் சல்மாவின் படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Apply for Admission

நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார்.

வில்சன்:

மூத்த வழக்கறிஞர். இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலகவும், தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனராலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

வில்சன்
வில்சன்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

எஸ்.ஆர்.சிவலிங்கம்:

எஸ்.ஆர்.சிவலிங்கம்:
எஸ்.ஆர்.சிவலிங்கம்:

திமுகவின் நீண்டகால களப்பணியாளரான திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்கள் திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

எஸ்.ஆர்.சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.