திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் அனுசரிப்பு!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் சட்ட கல்வி அறிவு சங்கம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான நாளை இன்று 26. 6. 2025 அன்று பிஷப் ஹீபர் கல்லூரியில் அனுசரித்தனர்.
நிகழ்ச்சிக்கு முதுகலை சமூகப் பணித்துறையின் தலைவர் முனைவர். F. கார்ட்டர் பிரேம்ராஜ் அவர்கள் தலைமை வகித்து போதை பொருட்களால் பாதித்தவர்களை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதில் சமூகப் பணியாளர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். சுப்புராஜ் பேசுகையில் போதை பொருட்கள் குறித்த சட்டங்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களுக்கு சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். சட்ட உதவி வழக்கறிஞர்களான சிவ சூர்யா மற்றும் ராம்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூகப்பணி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக முதுகலை சமூக பணித்துறை பேராசிரியை முனைவர்.ஆர். சரஸ்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இறுதியாக மாணவி ஜமுனா அனைவருக்கும் நன்றி கூறினார்.