செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டம் !
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பற்றிய விழிப்புணர்வு கூட்டம்; கல்லூரி வளாகத்தில் உள்ள சமூதாய கூடத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச மற்றும் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி சுற்றுச்சூழல் குழுவானது செப்பர்டு பணி செய்ய கூடிய கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தால் மட்டும் போதாது, அக்கன்றுகளை தொடர்ச்சியாக பராமரித்து பெரிய மரமாக வளர்த்து சுற்றுபுற சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்கள்
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச அவர்களின் வழிகாட்டுதலின் படி
ஜெயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஜான் கே திருநாவுக்கரசு அவர்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்த நோக்குநிலை பல்லுயிர் பெருக்கம் உணவு சங்கிலி பற்றியும்; மேலும் மாணவர்கள் கிராமங்களில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறினார். மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தார்கள்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் நிடித்த நிலைத்த இலக்கு பற்றி எடுத்துக் கூறினார். வந்தவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் வரவேற்றார் முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார். முது நிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சுற்றுசூழல் குழு மற்றும் மூலிகை குழு மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். தொழில் நுட்ப உதவிகளை அமலேஸ்வரன் செய்திருந்தார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.