பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

0

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கலந்துகொண்டார்.

பாமக சதாசிவம்
பாமக சதாசிவம்

குறிப்பாக கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் பாமக கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வேகமாக ஓடிச்சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடன் கேள்வியில் இருந்து தப்பிச்செல்ல செய்தியாளர்கள் சென்றவுடன்  காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.