அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மாவட்டத்தில் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்புஆண்டில்,திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 91835 ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 15 ஆம் தேதிபயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் 18938 ஏக்கர் பரப்பளவிற்குமட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

மேலும் நடவுபணிகள் தாமதமாக ஆரம்பித்த காரணத்தினாலும், மழைபொழிவு தாமதமாக உள்ள காரணத்தினாலும், இன்னும் 15 நாட்களுக்குபயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நெல் பயிர் காப்பீடு
நெல் பயிர் காப்பீடு

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.566/-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பு ரபி மற்றும் சிறப்பு பருவத்திற்கு ஷீமா (KSHEMA GIC) பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Admission Enquiry Form

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிவரை காத்திருக்காமல் நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து இந்த நல்வாய்ப்பினை தவறாமல் பயனபடுத்தி கொள்ளுமாறு  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.