மகாத்மா காந்தி SLUI பள்ளி தேர்வில் தேர்ச்சியடையவில்லை – வீ.சுந்தர்
மாண்புமிகு மாணவர்களே! பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றியுடன் மேற்படிப்பு தொடர உள்ள மாணவர்களுக்கு என் அன்பின் இனிய வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்…
தேர்வில் வெற்றியை இழந்தாலும் வரும்காலத்தில் மீண்டும் பீனிக்ஸ் பறவைப் போல் எழுச்சியுடன் பயணித்து மாபெரும் வெற்றிகளையும் பற்பல சாதனைகளையும் சரித்திரங்களையும் உருவாக்க உள்ள மதிப்புமிகு மாணவர்களே! விடா முயற்சியின் நம்பிக்கையுடன் வரும் நாட்களில் தேர்ச்சியை இழந்த பாடங்களை துணைத்தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்று வெற்றியுடன் மேற்படிப்பு தொடர வேண்டும் என வேண்டுகோளுடன் என் அன்பின் வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்…!

மதிப்பெண் மட்டும் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்தி விடாது. தேர்வில் மதிப்பெண் பெறுவது என்பது தன் கல்வித்திறனை சுய பரிசோதனை செய்வதேயாகும். உலகம் போற்றும் மகாத்மா காந்தி அவர்களும் தான் எழுதிய பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சியடையாமல் வெற்றியை இழந்தார். ஆனாலும் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். உலகம் போற்றும் மாமனிதராக சரித்திரம் படைத்தார்…
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புகழ்பெற்ற மாமனிதர்களும் கூட சில சூழலில் பின்னடைவுகளை சந்தித்து மீண்டும் எழுச்சி பெற்று வெற்றி பெற்றதை அறிந்துகொள்வோம். உதாரணத்திற்கு உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், டோனி, விராட்கோலி போன்றவர்கள் கூட சில நேரங்களில் ரன் ஏதும் எடுக்காமலேயே பூஜ்ஜியம் ரன்னில் பெவிலியன் திருப்பியுள்ளனர். அதனால் அவர்களை திறமையற்றவர்கள் என்று கனித்துவிட முடியுமா? மீண்டும் வரும் ஆட்டங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி அதிக ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டநாயகன் பரிசு பெற்று சாதனை நிகழ்த்தியதை நினைவில் கொள்வோம்! இதுபோல் பல துறைகளை சார்ந்த பிரபலங்கள் பெரும்பாலோர் சில சூழலில் பின்னடைவுகளை சந்தித்து மீண்டும் எழுச்சியுடன் வெற்றிபெற்று நிருபித்துள்ளார்கள்.
டாக்டர் அப்துல்கலாம் கனவு பிள்ளைகளான மாண்புமிகு மாணவர்களே! தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது மற்றும் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்று சோர்ந்து போய்விடாமல் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து மீண்டும் எழுச்சியுடனும் நம்பிக்கையுடனும் களம் நோக்கி புறப்படு! வரும் நாட்களில் நடக்கும் துணைத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத பாடங்களை மீண்டும் எழுதி வெற்றிப்பெற்று இந்த கல்வி ஆண்டிலேயே நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள்…

மதிப்புமிகு மாணவர்களே நமக்குள் இருக்கும் திறனை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும். நம்மில் இருக்கும் திறனை கொண்டு பயணிக்கவுள்ள துறைகளில் நீதியுடன் நேர்மையுடன் ஒழுக்கம் நிறைந்த அறத்துடன் வாழ்ந்து பயணியுங்கள்… மாண்புமிகு மாணவர்களே… வாழும் நாட்களில் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்…! வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!!!
— வீ.சுந்தர், காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு மதுஒழிப்பு போராளிகள்.