பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பேர் பலத்த காயம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பேர் பலத்த காயம் – விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவரு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இங்கு பேன்சி ரக பட்டாசுகள் 60 மேற்பட்ட அறைகளில் 100 மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

பட்டாசு விபத்தில் பலியான நபர்களை மீட்கும் பணி
பட்டாசு விபத்தில் பலியான நபர்களை மீட்கும் பணி

அப்போது மணி மருந்து கலவை அறையில் மாரியப்பன்,முத்துவேல் மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

Apply for Admission

மேலும் சரோஜா ,சங்கர வேல் ஆகிய இருவரும் பலத் தீ காயத்துடன் சிவகாசி அரசு மருந்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

மேலும் இந்த விபத்து தொடர்பா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரீஸ் கான் அப்துல்லா பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

– மாரீஸ்வரன் 

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.