புதிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி !
டெஸ்வோஸின் (DESWOS) ஆதரவுடன், திருச்சி சேவை (SEVAI) அமைப்பானது ஆமூர் களஞ்சியம் மையத்தில் நவீன மீன் வளர்ப்பு முறைகளை கற்றுத்தருகிறது. பெண் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பை ஒரு நிலையான வாழ்வாதாரமாக மேற்கொள்ள வழிகாட்டும் பொருட்டு, பாரம்பரிய திறந்தவெளிக் குள மீன் வளர்ப்பு மற்றும் மேம்பட்ட பயோஃப்ளாக் தொழில்நுட்ப அமைப்பு ஆகிய இரண்டு அணுகுமுறைகளில் பயிற்சியை வழங்கி வருகிறது.
திறந்தவெளிக் குளம் வளர்ப்பிற்காக, குளம் தயாரித்தல், குஞ்சுத் தேர்வு, நீரின் தர மேலாண்மை, தீவன முறைகள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
அதுமட்டுமின்றி, நீரின் தரத்தைப் பராமரிக்கவும் தீவனச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி, சிறிய இடங்களில் அதிக அடர்த்தியில் மீன் வளர்க்க வழிவகுக்கும் பயோஃப்ளாக் தொழில்நுட்பத்தையும் கற்றுத்தருகிறார்கள். பெண்கள் தொழில்நுட்ப அறிவையும் தன்னம்பிக்கையையும் பெறும் வகையில், சேவை (SEVAI) அமைப்பின் சிறந்த முன்னெடுப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
– கிருஷ்





Comments are closed, but trackbacks and pingbacks are open.