உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக்கூட்டம் !
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் சேதுராப்பட்டி, இனாம்மாத்தூர், அளுந்தூர், இனாம்குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் சுதந்திர தின விழா அன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச உன்னத பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டோம்னிக் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனை படி முதுநிலை ஒருங்கிணைப்பாளர்; லெனின் இனாம்மாத்தூரில் திடக்கழிவு பற்றியும் புவி வெப்பமயமாதல் பற்றியும்,
ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் கல்லூரி முதல்வரால் யாகப்புடையான் பட்டிக்கு அர்பணிக்கப்பட்ட சிறுகாற்றாலை பற்றியும் ஆரோக்கியம் சுகாதாரம் பற்றியும் ஒருங்கிணைப்பாளர் யசோதை நாகமங்கலத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பற்றியும்,
ஒருங்கிணைப்பாளர் சுதாகர் இனாம்குளத்தூர் ஊராட்சியில் குப்பை சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் இயக்கங்களை ஒழுங்கமைத்தல் மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் பற்றியும்,
சேதுராப்பட்டியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் செங்குத்தாக சுழலலும் சிறுகாற்றாலை நிறுவப்படுவது பற்றியும் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
மேலும் எதிர்வரும் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுபுற சுகாதார மேம்பாடு பற்றியும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது்
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், கிராம பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். முக்கியமாக அனைத்து கிராம சபைக்கூட்டங்களிலும் தமிழக முதல்வர் பேசியது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.