நாளை நாட்டை ஆளும் நட்சத்திரங்கள் நாங்கள் !
கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத்தான் பட்டமளிப்பு விழா நடத்தி பட்டங்களை வழங்க வேண்டுமா? எங்களுக்கெல்லாம் இல்லையா? என்று ஏங்கும் பிஞ்சுகளை குஷிப்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவை நடத்தியிருக்கிறார்கள் திருச்சி பெட்டவாய்த்தலை, சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர்.
பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற மாநில அரசின் சிறப்பு விருதை வென்ற சேவை தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் சேவை கோவிந்தராஜை அறங்காவலராக கொண்டு செயல்பட்டு வரும் பள்ளிதான் சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
கல்லூரிகளைப் போலவே கண்கவர் அங்கிகளை அணிந்தபடி, சூப்பர் ஹீரோக்களைப்போல ஒய்யாரமாக நடந்து வந்தார்கள் மழலை செல்வங்கள். மின்னும் சாகசப் பாடல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துள்ளலான பாடல்கள், வண்ணமயமான நடனங்கள் மற்றும் வேடிக்கையான சிறு நாடகங்களால் மொத்த நிகழ்வுகளும் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது.
– கிருஷ்







Comments are closed, but trackbacks and pingbacks are open.