பள்ளியில் திருக்குறள் திருவிழா நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை !

0

பள்ளியில் திருக்குறள் திருவிழா நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

 

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில்  மணிகண்டன் தலைமையில் திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருவிழா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. வழிகாட்டி மணிகண்டனுடன் கவிஞர் ரவி நடுவராக மாணவ மாணவிகளிடம் திருக்குறள் கேள்விகளை கேட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்தார்.

மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டு பதில்களை வழங்கினர்தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரங்களால் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.