பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம் !
சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மைப் பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையை கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகைக்கு உரியவரிடம் அந்த நகையும் பத்திரமாக சேர்க்கப்பட்டது.
இதற்காக பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது பத்மாவின் நேர்மைக்கான கௌரவம் கடல் கடந்து தேடி வந்துள்ளது . மலேசிய சட்டத்துறை அமைச்சரான குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை அறிந்து தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.
அதிகாரி வடிவுக்கரசி பணியாளர் பத்மா பணி செய்யும் இடத்திற்கே நேரில் சென்று அவருக்கு மோதிரம் அணிவித்தார். அப்போது போது தூய்மை பணியாளர் பத்மாவுடன் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் மு .குலசேகரன் வீடியோ காலில் பேசி, அவருக்கு தனது மனப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.