இந்தி சினிமா-வில் இப்படி ஒரு மாற்றமா ?
ஒரு சின்ன தகவல் 2015-க்கு பிறகு கடந்த 10 வருடத்தில், வட இந்திய, இந்தி சினிமாவில் Dalit-யை கதாநாயனாக கொண்டு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. அதற்கு மாறாக சாதிய இந்துத்துவ வலதுசாரி திரைப்படங்கள் வெளிவருவது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அரசின் துணையோடு பெரும் வெற்றி பெருகின்றன.
Kashmir files, kerala story மட்டுமில்ல Hindutva Chapter One: Main Hindu Hoon, Veer savarkar வரை வெளிப்படையா அவர்கள் Main stream ஊடகத்தை கைப்பற்றி இப்படித்தான் படம் எடுத்தாக வேண்டும் என்று மறைமுகமா உத்தரவிடுகின்றனர்.
தெலுங்கு, கண்ணட சினிமாக்கள் அதை நோக்கி நேரடியாக நகர்வதை கண்கூடாக பார்க்கிறோம். .
தமிழ்நாடு, கேராளாவில் ஒரளவு அதற்கு எதிராக நீந்துவது என்ற சவாலான இலக்கை கையில் எடுப்பதற்கு இங்கு பல சமூக காரணிகள் உண்டு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரம், பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் வடக்கை விட இங்கே நாம் முன்னேறியிருக்க இடதுசாரிய, திராவிட, அம்பேத்கரிய அரசியலின் பங்கு முக்கியமானது.
இந்த நிலையிலிருந்து நாம் BISON-ஐ அணுகவேண்டும்.
இங்கே அசுரன், கர்ணன், BISON வசூல் ரீதியாக வெற்றிபெறுவது அந்த எதிர் நீச்சலின் பாய்ச்சலைக் குறிக்கிறது.
அந்த பாய்ச்சல்தான் கவுண்டம்பாளையம், திரௌபதி, கௌதமன்களை Troll material ஆக சமூகத்தில் மாற்றிவிடுகிறது.
BISON-ஓ, அசுரனோ விமர்சனத்திற்கு அப்பார்பட்டதில்லை. அதை விமர்சிப்பதற்கு முன் இந்த காரணகிகளையும் கணக்கில் கொள்க…
BISON-ஐ தமிழ்ச் சமூகம் நிச்சயம் கைவிடாது.
— பாமரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.