நெல்லை மேயர் சரவணன் நான் ராஜினாமா செய்யவில்லை !

0

நெல்லை மேயர் சரவணன் நான் ராஜினாமா செய்யவில்லை !

நெல்லை மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்வதாகவும், தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  கடந்த சில மாதங்களாகவே நாட்களாகவே கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் இந்த செய்தி வெளியானது. அமைச்சர் கே.என்.நேருவிடம் இரண்டு முறை எதிர்ப்பு கவுன்சிலர்கள் அனைவரும் புகார் செய்து வருகிறனர். 

https://businesstrichy.com/the-royal-mahal/

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேயர் சரவணனுக்கும், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாபிற்க்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேயரை மாற்ற கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்கி வந்ததாக கூறப்படுகிறது. மேயர் சரவணன் இளைஞர் அணியில் மாவட்ட பொறுப்பில் இருப்பதால் அமைச்சர் உதயநிதி தலையிட்டு இதை முடிவு செய்வார் என்று தெரிவித்து வந்த நிலையில்… ஊடகங்களில் நெல்லை மேயர் ராஜினாமா என்று செய்தி பரவிவருகிறது..

இந்த நிலையில், நெல்லை மேயர் சரவணன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, நெல்லை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.