ரோட்டுக்கு நடுவுல 3 அடி நிலம் எனக்கே சொந்தம் – சாலையை அமைக்க விடாமல் சவால் விடும் ரெட்டியூர் ரீட்டா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரோட்டுக்கு நடுவுல 3 அடி நிலம் எனக்கே சொந்தம் – சாலையை அமைக்க விடாமல் சவால் விடும் ரெட்டியூர் ரீட்டா !
பழங்குடியினருக்கு சொந்தமான நடு வீதியில் 3 அடி நிலம் தனக்கு சொந்தமானது. அதனால் சாலை அமைக்கக் கூடாது என்று ஒரு பெண் 2 ஆண்டுகளாக போலீசுக்கும் , பொதுமக்களுக்கும் போக்கு காட்டி வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் பகுதி 8 – வது வார்டு வீதிக்கு இரண்டரை வருடங்களாக சாலை அமைக்க முடியாமல் ஜோலார்பேட்டை பிடிஓ, ஒன்றிய கவுன்சிலர், போலீஸ் என மாவட்ட நிர்வாகமே திணறி வருவதாக நமக்கு தகவல் கிடைக்க சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தோம்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ரெட்டியூர் கூட்ரோடு பழங்குடி மக்கள்
ரெட்டியூர் கூட்ரோடு பழங்குடி மக்கள்

கடுகடுத்த ரெட்டியூர் கூட்ரோடு பழங்குடி மக்கள்

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

”இந்த பொது வழிச்சாலையை ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு கடந்த வருடம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டோம்ங்க. எங்கள் பகுதியின் வார்டு கவுன்சிலர் நிதியில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க இரண்டு முறை ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டும், இது நாள் வரை இந்த வீதிக்கு சாலை அமைக்க முடியவில்லை.

இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் பார்த்துட்டோம் எந்த பலனும் இல்லைங்க. காரணம் கேட்டபோது ? அந்த பெண் பெயர் ரீட்டா இந்த வீதிக்கு நடுவில் 3×3 அடி இடம் மட்டும் எனக்கு சொந்தமானது அதனால் சாலை அமைக்க கூடாது என்கிறார்.

இது குறித்து புகார் அளிக்கும் போதேல்லாம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிடும் போது சம்மந்தமே இல்லாத அந்த ரீட்டா என்ற பெண் அரசிடம் ஒப்படைத்த இந்த வீதியை சொந்தம் கொண்டாடுகிறது. ஆதாரம் இருந்தா எடுத்துட்டு வாங்கனு அதிகாரிகள் தரப்பில் கேட்டால், ”வீட்டில் உள்ளது , காட்டும் போது காட்டுவேன்” என்கிறார். கூச்சல் போடுகிறார். வந்த அதிகாரிகள் வந்த வேகத்திலே பின்வாங்கி ஒட்டமெடுக்கிறார்கள்.

ரெட்டியூர் கூட்ரோடு பழங்குடி மக்கள்
ரெட்டியூர் கூட்ரோடு பழங்குடி மக்கள்

இப்படிதாங்க நாங்கள் புகார் அளிக்க … அதிகாரிகள் வந்து பார்வையிட … அந்த ரீட்டா தடுக்க … என போய்க்கொண்டிருக்கிறது. எப்பதான் எங்க வீதிக்கு விடிவுகாலம் பிறக்குமோ” என ஆதங்கப்பட்டனர்.

பிரச்சினை குறித்து கடந்த பிப்ரவரி 10 /2024 அன்று ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். புகாரின் பேரில் இரு தரப்பிடம் விசாரித்தனர். நாங்கள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தோம். ஆனால், அந்த பெண் சொந்தம் கொண்டாடும் வீதிக்கு ஆவணம் கொடுக்க மறுத்தார்.

ஒரு கிலோமீட்டர் அப்பால் உள்ள ”அவர் சொத்து இருக்கும் இடத்தின் சர்வே நம்பருக்கும்; இந்த பொது வழிக்கு உண்டான எந்த சர்வே நம்பருக்கும், சம்பந்தமில்லை” என ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் திட்டவட்டமாக மறுத்து கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தி, உங்கள் பணியை செய்யுங்கள் அதையும் மீறி அந்த பெண் தடுத்தால், வட்டார வளர்ச்சி அலுவலர் முறையாக புகார் கொடுக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மேல் நடவடிக்கை எடுக்க தயார் என்று உறுதியளித்திருந்தார்.

ரீட்டா
ரீட்டா

Apply for Admission

சில மாதங்கள் கழித்து 2/5/2024 அன்று அப்போதைய ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த வசந்தியிடம் புகார் அளித்தோம். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்து , எதிர்ப்பு தெரிவித்த ரீட்டாவிடம் அதற்கான ஆவணங்களை எடுத்து வருமாறும், அல்லது சர்வேயர் மூலம் உங்கள் இடத்தை அளவிட்டு சரி பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்திவிட்டு சென்றதால் சாலைக்கு ஜல்லி நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனதால் பாதியில் விடப்பட்ட சாலையை புதுப்பித்து, பேவர் ப்ளாக் கற்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி வார்டு கவுன்சிலர் , ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீஸ் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் இப்பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.

மேலும், இந்த பகுதியில் இருந்து, அந்த பெண் குடியிருக்கும் பகுதி சுமார் 1 கிலோமீட்டர் இருக்கும். அங்கிருந்து வந்து இந்த வீதியின் நடுவில் 3 அடி இடம் இருப்பதாக கூறுவது என்ன மனநிலையில் இருப்பார் என்று தெரியவில்லை என ஆதங்ககப்பட்டனர்.

எதிர்ப்புக்கான காரணம் என்ன என்று அருகில் இருந்தவரிடம் கேட்டோம். ”பிரச்சனை செய்யும் அந்த பெண்ணின் குடும்பத்தில், சொத்து பிரச்சனை உள்ளது. அதாவது இங்கு குடி இருக்கும் இந்த இடங்களை அந்த பெண்ணின் மைத்துனர் ஃப்ளாட் போட்டு விற்றார்.

கவுன்சிலர் சிவப்பிரகாசம்
கவுன்சிலர் சிவப்பிரகாசம்

அவரது குடும்பத்தினருக்கும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் ஊருக்கு அருகில் உள்ள பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. மைத்துனர் விற்ற எங்கள் பகுதியின் பொதுவழியை சொந்தம் கொண்டாடினால் மைத்துனரின் வாரிசுகள், சொந்த நிலத்தின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்தப் பெண் இவ்வாறு செய்கிறார், என சந்தேகிக்கிறோம்.” என்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கண்டிப்பாக நாளைய தினம் நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்துவிட்டு பதிலளிப்பதாக” கூறினார்.

ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசத்திடம் பேசினோம். “நாங்களும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம் சார். அந்த பெண் கேட்கல. அவர் வீட்டுகாரர் வராமல் இந்த பெண்ணே வந்து வம்பிழுத்து வருகின்றார். உங்களுக்கு 3 ×3 அடி நிலம் சொந்தமானதற்கு ரிக்கார்ட் காட்டினால் நானே அந்த இடத்தை எடுத்து கொடுத்து வடுகிறேன் என்று கூறினேன். அப்பவும் அந்தம்மா கேட்கவில்லை சார். கண்டிப்பாக அடுத்த வாரத்தில் அந்தப் பணியை செய்து முடிக்கிறேன்” என்று உறுதியளித்தார் .

வழக்கறிஞர் ராமஅசோகன்
வழக்கறிஞர் ராமஅசோகன்

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் ராமஅசோகனிடம் பேசினோம். “உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் என்று எடுத்துக்கொண்டால்; தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் வசிக்கும் வார்டுகளின் சாலை, குடிநீர், கழிவு, சுகாதாரம், ரேஷன் கடைகள் போன்ற மக்களின் அத்தியாவசியமான திட்டங்களை ஏற்பாடு செய்வதும் அதன் பராமரிப்புக்களை கவனித்துக்கொள்ளுதல்; பொது மக்களின் குறைகளை கேட்டறிதல்; மற்ற மத்திய – மாநில அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப் படுகின்றனவா என பார்த்துக்கொள்தல் ஆகியன அடங்கும்.

மிக முக்கியமாக, பஞ்சாயத்துராஜ் சட்டப்படி பஞ்சாயத்துகளில் இயற்றப்படும் சில தீர்மானங்களில் தலையிடும் உரிமை உச்ச நீதிமன்றதிற்குக்கூட கிடையாது. அவ்வளவு அதிகாரம் படைத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி. அதனால் இந்த பிரச்சினையை வார்டு உறுப்பினர், சம்மந்தப்பட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகியோரே முன்னின்று தீர்வு காணலாம். இவர்களில் ஒருவர் அப்பகுதிக்குட்பட்ட காவல்துறையில் புகார் அளித்து, உடனடியாக தீர்வு காணலாம். தேவைப்பட்டால், அந்தப் பெண்ணை கைது செய்து சாலைப் பணியை முடிக்க வேண்டும்” என்றார்.

இந்த விவரங்கள் அப்பகுதியின் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் – பிரதிநிதிகள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், உள்ளூர் விவகாரம் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிச் செல்வதாகவே தெரிகிறது. ரெட்டியூர் எட்டாவது வார்டு பழங்குடி மக்களின் வீதியை எப்போதுதான் சீர் செய்வார்கள் என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே?

கா. மணிகண்டன்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.