காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் , ச.மணிவண்ணன் முதன்மை தலைமை பொறியாளர், செந்தில் தலைமைப் பொறியாளர்,செந்தில்குமார் கண்காணிப்பு பொறியாளர், P அன்பரசி, செயற்பொறியாளர், T.N. கண்ணன், செயற்பொறியாளர் (மின்) பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் ச.கமல், உதவி செயற்பொறியாளர்( மின் ) P. செல்லன் செயற்பொறியாளர் தரக்கட்டுப்பாடு.பாலசுப்ரமணியன் உதவி செயற்பொறியாளர் தரக்கட்டுப்பாடுகட்டிட பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உடன் இருந்தனர்.