இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி காரணம் இது தானா ?
இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி காரணம் இது தானா ?
முட்டை மாவட்ட காவல்துறையில் ராசியான காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக ’சுகமான’ பெயரைக்கொண்டவர் இருந்து வருகிறார்.
இவர் கடந்த வாரத்தில் பணிநேரத்தின் போது, செல்போன் பேசியபடி கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்கிற விக்ஷயம் மட்டும் உயரதிகாரிகளுக்கு தெரியாமலேயே இருந்து வந்துள்ளது.
அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்தபோது, சில உயரதிகாரிகள் தொலைபேசி எண் அடிக்கடி பேசியதும், அவரை தொடர்ந்து டார்ச்சல் செய்து மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்மட்ட அதிகாரிகள் மெடிக்கல் விடுப்பில் சென்ற சுகமான அதிகாரியை விசாரணை வலைக்குள் கொண்டு வந்து தனிவிசாரணை செய்து வருகின்றனர்.
– ஆதிரன்