பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக … உலகை ஆளப்போறான் தமிழன் !

ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் என்று படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பு என முருகானந்தம் கடந்து வந்த பாதை அசாத்தியமானவை.

0

பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக … உலகை ஆளப்போறான் தமிழன் !

“இவரை எப்படியாவது, நமது கட்சியின் வேட்பாளராக ஆக்கிவிட வேண்டும்” என்று தமிழகத்தின் பிரதான கட்சிகள் பலவும் போட்டிப் போட்டுக்கொண்டு வேட்பாளரை முகாமிட்டுக் கொண்டிருந்த தருணம் அது.

ரோஸ்மில்

ஏற்கெனவே, மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர். அமைதியான அரசியல்வாதி. திறமையான தொழிலதிபர். இயல்பிலேயே ஈகை குணம் கொண்டவர். ”எந்தக் கட்சி அவரை வென்றெடுக்கப் போகிறது?” என்று எல்லோரும் காத்திருந்த வேளையில், எவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நாடாளுமன்றத்திற்கு அல்ல, அதையும் தாண்டி ”உலகை ஆளும் மன்றத்திற்கே” பிரதிநிதியாக தேர்வாகியிருக்கிறார் அவர்.

ஆம். 119 ஆண்டுகளை கடந்து சமூக சேவையை நோக்கமாக கொண்டு 1.4 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பான பன்னாட்டு ரோட்டரியின் 2025-27 ஆம் ஆண்டிற்கான இயக்குனராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ”ட்ரிபிள் எம்” முருகானந்தம்.

- Advertisement -

- Advertisement -

பன்னாட்டு ரோட்டரியின் பின்னணி !

“தன்னைவிட மேலானது சேவை” என்ற முதன்மை நோக்கத்தோடு  1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ரோட்டரியின் 7 Areas of Focus எனப்படும் உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும், சுத்தமான தண்ணீர், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மேம்படுத்தவும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றவும், கல்விக்குஆதரவளிக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும் மற்றும் சுட்டுப்புறச்சூழலை பாதுகாக்கவும் என்பதான ஏழு முக்கிய இலக்குகளை நோக்கிய பயணத்தைக் கொண்டதுதான் பன்னாட்டு ரோட்டரி. உலகம் முழுவதிலும் சுமார் 46000-க்கும் மேற்பட்ட சங்கங்களைக் கொண்ட மாபெரும் அமைப்பு இது.

ரோட்டரியின் உயிர்நாடியாக திகழும் ரோட்டரி அறக்கட்டளை 1917 ஆண்டு நிறுவப்பட்டு, உறுப்பினர்கள் வழங்கும் நன்கொடைகளை தான் பொறுப்பேற்றுக் கொண்ட முக்கிய இலக்குகளுக்காக இந்நாள் வரை 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

ரோட்டரி அறக்கட்டளை பாகிஸ்தானில் வெள்ளம், உக்ரைனில் நடந்த போர் மற்றும் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெருமளவில்  நிதியை நிறுவியது. ஒட்டுமொத்தமாக, அறக்கட்டளையானது இயற்கைப் பேரழிவுகள் மற்றும் போருக்குப் பிறகு உதவுவதற்காகபேரிடர் மறுமொழி மானிய நிதியாக US$14.8 மில்லியன் வழங்கியிருக்கிறது.

உலகளாவிய போலியோ ஒழிப்பு முன் முயற்சிக்கு 1979ல் இருந்து போலியோ நோயாளிகளை 99.9 சதவிகிதம் குறைத்த பெருமைக்குரிய அமைப்பு. இதற்காக, 122 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 3 பில்லியன் குழந்தைகளை முடக்குவாத நோயிலிருந்து பாதுகாக்க ரோட்டரி உறுப்பினர்கள் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ரோட்டரியின் பங்கு !

இந்தியா தனது முதல் ரோட்டரி கிளப்பை 1920 இல் கல்கத்தாவில் தொடங்கியது. இந்தியாவில், 41 ரோட்டரி மாவட்டங்கள் உள்ளன. மேலும் 4,564 கிளப்கள்1.7 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு, உலகளவில் ரோட்டரியில் மூன்றாவது பெரிய ஆதரவாளராக இந்தியா விளங்குகிறது.

ரோட்டரியில்17 உறுப்பினர்களை கொண்ட இயக்குனர் குழு இந்த சர்வதேச அமைப்பின் கொள்கைகளை நிறுவுகிறது. ரோட்டரியின் மேல்மட்ட வாரியத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரோட்டரி சர்வதேச மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு இயக்குநரும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுகிறார்கள். இந்தியாவிலிருந்து இரண்டு இயக்குனர்கள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.இக்குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மண்டலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள கிளப்புகளை மட்டுமல்லாமல் முழு ரோட்டரி உலகத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்களாக இதுவரை நான்கு இந்தியர்கள் இருந்துள்ளனர்.

தனது 16 வது வயதில் ரோட்டரி பயணத்தை ஒரு ரோட்டராக்டராக தொடங்கி, மிகவும் இளம் வயதிலேயே 2016-17 ல் ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றவர். தற்போது, ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவராக முதல்முறையாக தமிழகத்திலிருந்து அதுவும் திருச்சியிலிருந்து தொழிலதிபர் முருகானந்தம் தேர்வாகியிருக்கிறார்.

யார் இந்த முருகானந்தம்?

முருகானந்தம் ரோட்டரி மாவட்டம் 3000-த்தை சேர்ந்தவர். இது பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், மற்றும் கரூர் ஆகிய 8 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது.

4 bismi svs

பட்டயப் பொறியாளரான இவர் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.  2006ல் தனது 31-வது வயதில் EXCEL MARITIME & LOGISTICS கம்பெனியை துவங்கி, தொடர்ந்து EXCEL INFRA, EXCEL ENERGY, BALAJI ENGINEERING, MD IMPEX, EXCEL TRAVELS, BEATS JOBS, ZEAL TOURS AND EVENTS, EXCEL AGRO, EXCEL HEALTHCARE ல் தடம் பதித்து இன்று Excel குழுமமாக ”ஆலமர விழுதாய் ஆக்கியவர்” முருகானந்தம்.

ரோட்டரிஅறக்கட்டளையின் 100-வதுஆண்டினை கொண்டாடும் விதமாக தனது ஆளுநர் பொறுப்பின் போது 8 கின்னஸ் உலக சாதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய கின்னஸ் கவர்னர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.

இவருடைய ஆளுநர்  பொறுப்பின் போது 99 ரோட்டராக்ட், 250 இன்டராக்ட் மற்றும் 100 ரோட்டரி கம்யூனிட்டி காப்ஸ் சங்கங்களை துவக்கி, இளைஞர் சேவையில் உலகளவில் முதலிடம் வகித்தவர்.

தான் ஒரு ரொட்டேரியன் ஆவதற்கு முன்பே ரோட்டரிஅறக்கட்டளைக்கு நிதியளித்த பெருங்கொடையாளர். 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வழங்கி மாவட்டம் 3000 த்தின் முதல் ARCH KLUMPH SOCIETY memberஎன்ற பெருமையைப் பெற்றவர்.

வாரிக்கொடுத்த கொடையோ தாராளம்! வாங்கிக்குவித்த விருதுகள் ஏராளம் !

அவரது ரோட்டரி அறக்கட்டளை பங்களிப்புகள் மூலம், Global Grants மற்றும் Term Gifts மூலம் குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கோவிட் லாக்டவுனின் போது திருச்சி அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தல், மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான ICU வார்டு மேம்படுத்தல் மற்றும் பால் வங்கி உபகரணங்களை தருவித்தவர்.

இவருடைய ஒப்பற்ற தலைமைத்துவத்தை போற்றும் வகையில் ரோட்டரியின் Vocational  Leadership Award  மற்றும் ரோட்டரிஅறக்கட்டளையின் Citation for Meritorious Service  விருதை கவர்ந்தவர். தென்னிந்தியாவில் மிகவும் சிலருக்கே கொடுக்கப்பட்டுள்ள ரோட்டரியின் மிக உயரிய விருதான “Service Above Self ” விருதையும் தன்னகத்தே பெற்றிருப்பவர். மாவட்டம் 3000-த்தின் , 2023 ம் ஆண்டு மாநாட்டின்போது முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீவெங்கையாநாயுடு அவர்களின் கரங்களால் Distinguished Service Award  விருதை பெற்றவர்.

முருகானந்தம் தனது சொந்த நிறுவனமான Excel குழுமத்தின் சமூக பொறுப்பின் கீழ், Excel  அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கல்குவாரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்கான முத்தாய்ப்பான திட்டங்கள் பலவற்றை ஓசையின்றி செயல்முறைப்படுத்தி வருபவர்.

திருச்சி Spastic Children’s Society யின் நிர்வாகக்குழுவில் முக்கிய பொறுப்பை வகிக்கும் முருகானந்தம், விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் விதமாக ஏழை எளிய மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தனது தாயாரின் நினைவாக பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க தையல் பயிற்சி மையத்தை அமைத்து கொடுத்துள்ளார். வருடா வருடம் பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்டு சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாக திகழ்வோருக்கு EXCEL விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் வேலையின்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியும், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியும் பேருதவி செய்தவர்.

MMM ன் ஒப்பற்ற மனிதநேய சேவையைப் பாராட்டி சமீபத்தில் திருச்சி நேஷனல் கல்லூரி சர்வதேச விளையாட்டு மாநாட்டினை ஏற்று நடத்தியபோது “வாழ்நாள் சாதனையாளர்” விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்தது.

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக, ஒப்பற்ற சமூக ஆர்வலராக, சிறந்த கல்வியாளராக பல பரிமாணங்களைக் கொண்டவர். ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் ஆகிய நிலைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பேற்றிருக்கும் முருகானந்தம் கடந்து வந்த பாதை அசாத்தியமானவை. முன்னுதாரணமானவை.

”மாறு ! மாற்று!!” என்ற தாரக மந்திரத்தை வெறுமனே உச்சரிப்பவராக அல்ல; அந்த வார்த்தைகளின் வலிமையை உலகிற்கே உணர்த்துபவராக உயர்ந்து நிற்கிறார், ட்ரிபிள் எம் முருகானந்தம்.

மித்ரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.