அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்திகவும்..

திருச்சியில் அடகு நகையை விற்க

ஏதோ ஒரு அசாதரண நேரத்தில் கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்த்திகவும் ஒரு அரசியல் விஷ சூழலில் சிக்கிவிட்டார்கள்.

இந்த சாதரண மக்களுக்கு எந்த வித அரசியல் பின்புலமும் இல்லை அவர்கள் அவர்கள் வேலையை செய்கிறார்கள். ஒரு நாள்  அவர்கள் ஆளும் திமுக Vs திமுக எதிர்பாளார்களின் அரசியல் ஆட்டதில் சிக்கிவிட்டுகிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த இணைய உலக அரசியல் ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு ஆதரவாக இல்லை என்றால் அந்த சாதரண மக்கள் மிக பெரிய ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாவர்கள். அந்த தாக்குதலை அந்த சாதரண மக்களால் எதிர்க்கொள்ள முடியாது.

யாரவது அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் வீட்டில் வந்துவிட்டால் அதிகாரம் மிக்க அவர்களிடம் எப்படி முடியாது என்று சொல்லுவது ?  அதன் பின்னால் அவர்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு ?

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கார்த்திக
கார்த்திக

அந்த சாதரண மக்கள் ஓட்டு கேட்க எந்த கட்சியினர் வந்தாலும் சிரித்தபடி ‘ஆமாம் உங்க கட்சிக்கு தான் என் ஓட்டு’ என ஆமாம்  போட்டு விட்டு சென்று விடுவார்கள் . அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் ?

இப்போது கண்ணகி நகரில் இருந்து போராடி வந்திருக்கும் கார்த்திகாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே அந்த பெண் விளையாட்டு அரசியலில் போராடி கொண்டுதான் இருக்கிறார். அவரை போய் திமுக Vs திமுக எதிர்ப்பு அரசியலில் சிக்க வைக்க முயாற்சிக்கிறார்கள்.  அந்த பெண் விளையாடுமா இல்லை இந்த இணைய அரசியல் விளையாட்டில் சிக்கி சீரழைய வேண்டுமா ?

திடிரென அந்த பெண் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ ஏதாவது தெரியாமல் செய்துவிட்டால் அந்த சின்ன பெண் பின்னால் நிற்கபோவது யார் ?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நாளை காலை வேறு ஒரு சதி வேறு அரசியல் ஆதரவி எதிர்ப்புக்கு நீங்கள் சென்றுவிடுவீர்கள்.

உங்களின் அரசியல் சிக்கி கொள்ளும் சாதரண மக்கள் இணையம் முழுவது யார் ஒருவரால ஏதோ ஒரு abuse வாங்கிக்கொண்டு வாழ வேண்டும்.

எல்லா அரசியல் ஆதரவாளர்களும் abuse செய்வதில் தேர்ந்தவர்கள் தானே.

அப்படி அவர்களால் வாழ முடியுமா?

வினோத் ஆறுமுகம்
வினோத் ஆறுமுகம்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அரசு இலவசமாக கொடுத்த வீட்டிற்காக முதல்வரை பாரட்டா எதிர் கட்சியினர் ஆன்லை ட்ரோல் காரணமாக ஒரு பெண் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டார். ஏன் என்றால் சாதரண மக்களுக்கு இணைய அப்யுஸையும், அதிகாரத்தையும் , அரசையும் எதிர்க்கும் சக்தி, பொருளாதாராம் மன உறுதி இருக்காது.  அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை வரை செல்வார்கள்.

கரூர் விஷ்யத்தில் தன் பிள்ளை செத்தாலும் பரவாயில்லை என விஜயை பாராட்டிய மக்களை  நான் திட்டி பதிவு போட்டேன். ஆனால் இவர்கள் ஏன் இப்படி பேட்டி கொடுத்தார்கள் என யோசித்தால் அவர்கள் ஒரு அரசியல் சதுரங்கத்தில் சிக்கி விட்டார்கள். அவர்களால் அந்த அரசியல் சக்திகளை எதிர்க்கொள்ள முடியாது. முடியவே முடியாது. அதே போல் கண்ணகி நகர் கபடி குழுவினர் இவர்களின் கண்ணடி பட்டுள்ளது அவர்கள் இவர்களின் அரசியல் சதுரங்கத்தில் இருந்து தப்பி விட வேண்டும்..

 

—      வினோத் ஆறுமுகம், எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.