மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் சாலையோர வியாபாரிகள் திடீர் போராட்டம்

0

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறையினர் 40 பேரை கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் வைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்சாலையோர வியாபாரிகள் விதிமுறைகளை மீறி கடைகளை வைத்துள்ளதால் காவல்துறையினர் இரண்டு வரிசைகளாக ரோட்டில் இருபுறமும் வைக்க கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி. யு.சி அமைப்பு சார்பில் பதினாறு கால்மண்டபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையோர வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

-மதுரை சாகுல்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.