காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் !

0

இயற்கை வாழ்வியல் முகாம்

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஏழாவது இயற்கை வாழ்வில் முகாம்  நடைபெற்றன. அருங்காட்சியக பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினார் மேலூர் அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை நல மையத்தின் மருத்துவர் அக்னேஷ் அனாமிகா ” “மன,உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை வாழ்வியல்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் செவிலியர் திரு. உமாராணி “முழுமை வாழ்விற்கு யோகா, தியானம், பிரணாயாமம் “எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தியானம், பிரணாயாமம் பயிற்சி,  இயற்கை பழங்கள்,  மூலிகை டீ, முளைக்கட்டிய பயறு ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த முகாமில் யோகா மாணவர்கள், பொதுமக்கள், இயற்கை வாழ்வியல் அறிஞர்கள்  மற்றும்  அருங்காட்சியக ஊழியர்கள் லில்லி, முத்துக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக செயலாளர் திரு கே.ஆர்.நந்தாராவ் செய்திருந்தார்.

ஷாகுல் 

படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.