மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா !
மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
மதுரை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை முன்னிட்டு, பரவை முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

அவருக்கு மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் , மேளதாளங்களுடன் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது . விழாவில், 108 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர் அதனைத் தொடர்ந்து ,108 பசுக்களுக்கு கோபூஜை விழா சிறப்பாக நடைபெற்றதுமேலும், விழாவில் பரதநாட்டியம் , சிலம்பாட்டம் , கரகாட்டம் ,கிராமிய பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்