மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !

0

மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !

தேனி மாவட்டம், பூதிப்புரம் வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன்(18). இவர் கடந்த ஆண்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1தேர்வு எழுத வந்த போது மாணவி பிருந்தாவுடன் (18) பழக்கம் ஏற்பட்டது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

கமலேஸ்வரன்.

இவர்களின் காதல் பிருந்தாவின் அப்பா சன்னாசிக்குத் தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அழிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி கமலேஸ்வரனின் மொபைலை பறித்துச் சென்றார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும், தனது மகளுடன் தொடர்பு வைத்தால் கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இருப்பினும் கமலேஸ்வரன், பிருந்தாவுடன் பழகி வந்துள்ளார்.

இதனால், மார்ச் 16-ஆம் தேதி பிருந்தாவின் தந்தை சன்னாசி, தாய் தமிழ்ச்செல்வி ஆகியோர் கமலேஸ்வரன் வீட்டுக்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இருப்பினும் இருவரின் பழக்கம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த14-ஆம் தேதி டூவீலரில் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. 15-ஆம் தேதி காலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

கமலேஸ்வரனின் தாய் ஊஞ்சம்மாள் புகாரின் பேரில் சன்னாசி, தமிழ்ச்செல்வி ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

– ஜெ.ஜெ.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.