அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அறைக்குள் நடந்த சீச்சீ நடனம்‍ ! ரசிக்கும் திருச்சி மஞ்சள் சட்டை திமுக புள்ளி ! லீக்கான வைரல் வீடியோ !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அறைக்குள் நடந்த சீச்சீ நடனம்‍ ! ரசிக்கும் திருச்சி மஞ்சள் சட்டை திமுக புள்ளி ! லீக்கான வைரல் வீடியோ !

 

மதுரை தென்பழஞ்சியை சேர்ந்த தங்கமாயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் : ”மதுரை தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனால் குதிரை எடுப்பு திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ”ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக டிஜிபி 9.4.2019-ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வீடியோ லிங்

யாவரும் கேளீர்

அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களுடன் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும். மனு அளித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் முடிவு தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் ஆபாசமான அசைவுகள், வசனங்கள் இருக்கக் கூடாது. சாதி, மத, இன, மொழி அடிப்படையில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் நிகழ்ச்சியை போலீசார் எந்த நேரமும் நிறுத்தலாம். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன் அனுமதியுடன் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு இடையில் திருச்சியில் உள்ள சேர்ந்த எம்.எல்.ஏ. மகன் அந்த தொகுதியில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி  வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வீடியோ லிங்

பொது இடங்களில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச அசைகளுக்கு தடைவிதித்து இருப்பதால் தனிப்பட்ட முறையில் ரசிப்பதற்கு என்று ஆடல்பாடல் குழுவினரை ஒரு அறைக்கு அழைத்து வந்து  திருச்சியில் உள்ள ஆளும்கட்சி முக்கிய மஞ்சள் சட்டை புள்ளி உள்ளிட்ட  சிலர் நடத்தி ரசித்து இருக்கிறார்கள். தற்போது அங்கே எடுக்கப்பட்ட செல் போன் வீடியோ தற்போது  லீக் ஆகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யார் அந்த மஞ்சள் சட்டை விஐபி என்று பலர் தங்களுக்குள்  விசாரித்து வருகின்றனர்.  இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.