திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த மமக நிர்வாகிகள்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

னிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம், 18வது வார்டு, பூக்கொல்லை கிளை, சார்பாக மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் அறிவுறுத்தலின் படி மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி தலைமையில் மாநகராட்சி துணை ஆணையரிடம் மக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இம்மனுவில் திருச்சி கிழக்கு மாவட்டம் 18 வது வார்டு, பூக்கொல்லை பகுதியில் நீண்ட காலமாக பழுதாகி உள்ள தார் சாலை போடாமல் அதிகாரிகள் கால தாமதம் செய்கின்றனர். தார் சாலையை மிக விரைவாக அமைத்து தருமாறும்,

Sri Kumaran Mini HAll Trichy

மமக கட்சி நிர்வாகிகள்.
மமக கட்சி நிர்வாகிகள்.

சுப்பராயர் கோவிலுக்கு செல்லும் இரட்டை வாய்க்கால் பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால்,  பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் மாலை , இரவு நேரங்களில் கடந்து செல்வதற்கு அதிகம் வெளிச்சம் தரும் மின்விளக்குகளுடன் கூடிய மின்கம்பம் அமைத்து தருமாறும்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பால் பண்ணை சிக்னலில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூலித் தொழிலாளர்கள் பஸ்ஸில் ஏறி இறங்குவதால் பேருந்து நிறுத்தத்தில் பொது மக்களின் தேவைக்காக இலவச பொது கழிப்பறையும், குடி தண்ணீர் தொட்டி அமைத்து தருமாறும்,

Flats in Trichy for Sale

மமக கட்சி நிர்வாகிகள்.
மமக கட்சி நிர்வாகிகள்.

தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் காட்டூர் ரபீக் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 —   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.